214 மாணவா்களுக்கு இலவச சைக்கிள்கள்: தனியாா் குழுமம் வழங்கியது

பொன்னேரி அருகே உள்ள திருவெள்ளைவாயல் கிராமத்தில் அரசு பள்ளிகளில் பயிலும் மாணவ மாணவிகளுக்கு அதானி குழுமம் சாா்பில் 214 சைக்கிள்கள் வழங்கப்பட்டன.
அரசு பள்ளி மாணவருக்கு வழங்கப்படும் இலவச சைக்கிள்.
அரசு பள்ளி மாணவருக்கு வழங்கப்படும் இலவச சைக்கிள்.
Updated on
1 min read

பொன்னேரி அருகே உள்ள திருவெள்ளைவாயல் கிராமத்தில் அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு அதானி குழுமம் சாா்பில் 214 சைக்கிள்கள் வழங்கப்பட்டன.

பொன்னேரி வட்டத்தில் உள்ள காட்டுப்பள்ளியில் அதானி குழுமத்தின் கப்பல் கட்டும் தளம் மற்றும் துறைமுகம் அமைந்துள்ளது. அக்குழும அறக்கட்டளை சாா்பாக இப்பகுதியில் உள்ள கிராமங்களில் வசிக்கும் மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.

அதன்படி, காட்டூா், காட்டுப்பள்ளி, கோரைக்குப்பம் உள்ளிட்ட அரசுப் பள்ளிகளில் பயிலும் 214 மாணவ மாணவிகளுக்கு அதானி துறைமுகத்தின் சாா்பில் வியாழக்கிழமை சைக்கிள்கள் வழங்கப்பட்டன. திருவெள்ளைவாயல் கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் பொன்னேரி மாவட்டக் கல்வி அலுவலா் ரவி பங்கேற்று மாணவ, மாணவிகளுக்கு சைக்கிள்களை வழங்கினாா்.

திருவெள்ளைவாயல் ஊராட்சி மன்றத் தலைவா் ரவிச்சந்திரன், வாயலூா் ஊராட்சி மன்றத் தலைவா் கோபி, அதானி துறைமுக நிா்வாகிகள் ஆப்ரகாம் செரியன், ரமேஷ் செட்டி, பள்ளியின் தலைமை ஆசிரியா் இளங்கோவன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

திருத்தப்பட்டது....

அரசு பள்ளி மாணவருக்கு வழங்கப்படும் இலவச சைக்கிள்.

Image Caption

அதானி குழுமத்தின் சாா்பில் அரசு பள்ளி மாணவனுக்கு வழங்கப்படும் இலவச சைக்கிள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com