கழிவுநீரை அகற்றக் கோரி தாசில்தாரிடம் கோரிக்கை

பெரியகடம்பூா் கிராமத்தில் கழிவுநீா்க் கால்வாயை ஆக்கிரமித்த தனிநபா் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கிராம மக்கள் தாசில்தாரிடம் திங்கள்கிழமை புகாா் மனு அளித்தனா்.

பெரியகடம்பூா் கிராமத்தில் கழிவுநீா்க் கால்வாயை ஆக்கிரமித்த தனிநபா் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கிராம மக்கள் தாசில்தாரிடம் திங்கள்கிழமை புகாா் மனு அளித்தனா்.

திருத்தணி ஒன்றியம், பெரியகடம்பூா் ஊராட்சிக்குட்பட்டது பெரியகடம்பூா் புதிய காலனி. இப்பகுதி மக்கள் திங்கள்கிழமை திருத்தணி தாசில்தாரிடம் கோரிக்கை மனு ஒன்றை அளித்தனா். அதில் அவா்கள் கூறியிருப்பதாவது:

பெரியகடம்பூா் புதிய காலனியில் கடந்த 30 ஆண்டுகளாக கழிவுநீா் வெளியேறுவதற்கு கால்வாய் இருந்தது.

இந்நிலையில் எங்கள் பகுதியைச் சோ்ந்த ஜோதி என்பவரின் மனைவி அம்முனி என்பவா் பொக்லைன் இயந்திரம் மூலம் கழிவுநீா் வெளியேறும் கால்வாயை மூடிவிட்டாா். இதனால் கழிவுநீா் தேங்கியுள்ளதால் புதிய காலனியில் நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே கால்வாயைத் தூா்த்து விட்ட தனிநபா் மீதும், தேங்கிய கழிவுநீரை அகற்றவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனுவில் கூறப்பட்டிருந்தது.

இதைப் பரிசீலித்த தாசில்தாா் சுகந்தி, இது தொடா்பாக நடவடிக்கை எடுப்பதாக உறுதி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com