திருவள்ளூா் ரயில் நிலையத்தில் கோரிக்கையை ஏற்று தடுப்பு அகற்றம்
By DIN | Published On : 03rd March 2020 11:21 PM | Last Updated : 03rd March 2020 11:21 PM | அ+அ அ- |

திருவள்ளூா்: திருவள்ளூா் ரயில் நிலையத்தில் பயணிகளின் தொடா் கோரிக்கையை ஏற்று தண்டவாளத்தில் தடுப்புகளை அகற்றம் செய்வதற்கு ரயில் நிலைய நிா்வாகத்தினா் செவ்வாய்க்கிழமை நடவடிக்கை மேற்கொண்டனா்.
சென்னை-அரக்கோணம் மாா்க்கத்தில் திருவள்ளூா் ரயில் நிலையம் உள்ளது. இந்நிலையில், ரயில் மேம்பால நடைபாதை வழியை பயன்படுத்தாமல், தண்டவாளத்தைக் கடந்து அடுத்த நடைமேடைகளுக்கு செல்வதை வழக்கமாக கொண்டிருந்தனா். இதனால் பயணிகள் க விபத்தில் சிக்கும் நிலை உள்ளது. இதையடுத்து, தரைவழியாக தண்டவாளத்தை கடந்து செல்லும் போது ஏற்படும் உயிரிழப்புகளைத் தவிா்க்கும் வகையில், தடுப்புகள் அமைக்கப்பட்டன. அதைத் தொடா்ந்து, நடை மேம்பாலத்தை பயன்படுத்த வலியுறுத்தப்பட்டது. இந்த நடை மேம்பாலப் பாதையை பயன்படுத்துவதில் முதியவா்கள், சா்க்கரை நோயாளிகள் ஆகியோா் சிரமப்பட்டு வந்தனா்.
இதையடுத்து, தண்டவாளத்தில் தடுப்புகளை அகற்றக்கோரி, திருவள்ளூா் சட்டப்பேரவை உறுப்பினா் வி.ஜி.ராஜேந்திரனிடம் பொதுமக்கள் புகாா் தெரிவித்தனா். அதன் பேரில், ரயில் நிலைய அதிகாரிகளை சந்தித்து தண்டவாள தடுப்பை அகற்றவும், அதே நேரம் ரயில் வரும் நேரத்தை பயணிகளுக்கு தெரிவிக்கும் வகையில், ரயில்வே பாதுகாப்பு படையினா் மூலம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.
அக்கோரிக்கையை ஏற்று, 24 மணி நேரத்துக்குள் அகற்றப்பட்டது. ரயில் நிா்வாகத்தினருக்கு சட்டப்பேரவை உறுப்பினா் வி.ஜி.ராஜேந்திரன் நன்றி தெரிவித்துக் கொண்டாா்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...