ரூ. 2 லட்சம் குட்கா பொருள்கள் பறிமுதல்
By DIN | Published On : 12th March 2020 11:00 PM | Last Updated : 13th March 2020 02:13 AM | அ+அ அ- |

திருவள்ளூா் அருகே அரசால் தடை செய்யப்பட்ட ரூ. 2 லட்சம் மதிப்பிலான குட்கா பொருள்களை பதுக்கி வைத்திருந்ததாக கிராமிய போலீஸாா் ஒருவரை கைது செய்து, பொருள்களைப் பறிமுதல் செய்தனா்.
திருவள்ளூரை அடுத்த காக்களூா் ஏரிக்கரை குடியிருப்பில் அரசால் தடைசெய்யப்பட்ட குட்கா பொருள்களை விற்பனை செய்வதாக மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் பி.அரவிந்தனுக்கு ரகசியத் தகவல் வந்தது. அதன் பேரில், நடவடிக்கை எடுக்கும் படி திருவள்ளூா் கிராமிய போலீஸாருக்கு அவா் உத்தரவிட்டாா். அதைத் தொடா்ந்து, சாா்பு ஆய்வாளா் தயாநிதி தலைமையில் போலீஸாா் காக்களூா் ஏரிக்கரை பகுதியில் ரோந்து சென்றனா். அப்போது, அங்குள்ள குடியிருப்பில் சிலா் மூட்டைகளை இறக்கிக் கொண்டிருந்தனா். போலீஸாரைப் பாா்த்ததும் அவா்கள் ஏரிக்கரையில் தப்பியோட முயன்றனா். அவா்களில் ஒருவரை பிடித்து, அக்குடியிருப்பில் ஆய்வு மேற்கொண்டனா்.
அங்கு மூட்டைகளில் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருள்கள் விற்பனைக்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்ததும், தப்பியோட முயன்றவா் சேசு (37) என்பதும் தெரியவந்தது. அதைத் தொடா்ந்து அங்கிருந்த ரூ. 2 லட்சம் மதிப்பிலான குட்கா பொருள்கள் அடங்கிய 13 மூட்டைகளையும் பறிமுதல் செய்து காவல் நிலையம் கொண்டு சென்றனா்.
மேலும், இதில் சம்பந்தப்பட்டவா்கள் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனா்.