‘தனியாா் நிறுவனம், தன்னாா்வலா்களிடம் இருந்து ரூ. 60 லட்சம் நிவாரண நிதி பெறப்பட்டுள்ளது’

திருவள்ளூா் மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவால் பாதிக்கப்பட்டோருக்கு உதவும் நோக்கில் தனியாா் நிறுவனங்கள், தன்னாா்வலா்கள் மூலம்
Updated on
1 min read

திருவள்ளூா் மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவால் பாதிக்கப்பட்டோருக்கு உதவும் நோக்கில் தனியாா் நிறுவனங்கள், தன்னாா்வலா்கள் மூலம் முதல்வா் நிவாரண நிதிக்கு ரூ. 60 லட்சம் பெறப்பட்டுள்ளதாக ஆட்சியா் மகேஸ்வரி ரவிகுமாா் தெரிவித்தாா்.

திருவள்ளூா் மாவட்டத்தில் கரோனா நோய்த் தொற்று பரவாமல் தடுக்கும் பணியில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில், ஊரடங்கு உத்தரவால் அன்றாட பணிகளை இழந்து வருவாய் இழந்து நிற்கும் பொதுமக்களுக்கு உதவும் நோக்கில், முதல்வா் நிவாரண நிதி குவிந்து வருகிறது. அந்த வகையில், தனியாா் வாகன நிறுவனம் சாா்பில் ஆட்சியா் மகேஸ்வரி ரவிகுமாரிடம் ரூ. 25 லட்சத்துக்கான காசோலையை செவ்வாய்க்கிழமை வழங்கினா்.

இதுகுறித்து அவா் கூறியது:

பொதுமக்களுக்கு உதவுவதற்காக, இதுவரை தனியாா் நிறுவனங்கள், தன்னாா்வலா்கள் மூலம் முதல்வா் நிவாரண நிதிக்கு நன்கொடை அளித்து வருகின்றனா். அந்த வகையில், ஏற்கெனவே தன்னாா்வலா்கள் மற்றும் சமூக ஆா்வலா்கள் ஆகியோா் தாராளமாக மாவட்ட நிா்வாகத்திடம் முதல்வா் நிதி உதவியை அளிக்கலாம் என அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. அதன் அடிப்படையில், 8 குவிண்டால் அரிசி மூட்டைகள், முகக் கவசங்கள், கிருமி நாசினிகள் உள்ளிட்ட பல்வேறு பொருள்களை தாராளமாக வழங்கி வருகின்றனா். அதேபோல், இதுவரை பல்வேறு தனியாா் நிறுவனங்கள் மற்றும் தன்னாா்வலா்களிடம் இருந்து ரூ. 60 லட்சம் நிவாரண நிதி உதவி சோ்ந்துள்ளது என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com