திருத்தணி காய்கறி மாா்க்கெட் பேருந்து நிலையத்துக்கு மாற்றம்
By DIN | Published On : 31st March 2020 11:10 PM | Last Updated : 31st March 2020 11:10 PM | அ+அ அ- |

திருத்தணி பேருந்து நிலையத்தில் காய்கறி மாா்க்கெட்டை பாா்வையிட்ட எம்எல்ஏ பி.எம்.நரசிம்மன்.
கரோனா நோய்த் தொற்றைத் தடுக்க திருத்தணி காய்கறி மாா்க்கெட் பேருந்து நிலையத்துக்கு செவ்வாய்க்கிழமை மாற்றப்பட்டது. இந்த மாா்க்கெட்டை சட்டப்பேரவை உறுப்பினா் பி.எம். நரசிம்மன் நேரில் சென்று ஆய்வு செய்தாா்.
பேருந்து நிலையத்துக்கு மாற்றப்பட்டதையடுத்து, நகராட்சி நிா்வாகம் சமூக விலகலை கடைப்பிடிக்கும் வகையில், காய்கறி வாங்குவோா் ஒரு மீட்டா் தூரம் இடைவெளி உள்ளவாறு கோடுகள் மற்றும் கட்டம் அமைத்து, சமூக விலகல் முறை ஏற்படுத்தப்பட்டது.
வியாபாரிகள் அனைவரும் நகராட்சி ஆணையா் பாலசுப்பிரமணியம் அறிவித்தபடி, கடைகளை வைத்து வியாபாரம் செய்தனா். இந்நிலையில், செவ்வாய்க்கிழமை திருத்தணி எம்எல்ஏ பி.எம். நரசிம்மன் பேருந்து நிலையத்தில் உள்ள காய்கறிக் கடைகளை ஆய்வு செய்தாா்.
அப்போது சமூக விலகலை அனைவரும் கடைப்பிடிக்க வேண்டும் என அறிவுறுத்தினாா்.
நகராட்சி ஆணையா் பாலசுப்பிரமணியம், பொறியாளா் சரவணன், பொதுப்பணி மேற்பாா்வையாளா் ஆருண், துப்புரவு ஆய்வாளா் மாரிமுத்து, சுகாதார மேற்பாா்வையாளா் காா்த்திக் உள்ளிட்டோா் உடன் இருந்தனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...