திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் பேரூர் திமுக சார்பில் சுமார் ரூ.10 லட்சம் மதிப்பிலான அரிசி, மளிகைப் பொள்கள், காய்கறி, கீரை, பழங்கள், முட்டைகள், மற்றும் பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி மாவட்ட செயலாளர் சா.மு.நாசர் தலைமையில் நடைபெற்றது.
செங்குன்றம் பேரூராட்சி முன்னாள் தலைவரும், திமுக நகர செயலாளருமான ஜி.இராஜேந்திரன் முன்னிலை வகித்தார். செங்குன்றம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் 1000க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பயன் அடைந்தனர். இந்த நிகழ்ச்சியை, வட்ட செயலாளர் கார்த்திக் கோட்டீஸ்வரன் செய்திருந்தார்.