புழல் ஒன்றியத்தில் ஆட்சியா் ஆய்வு
By DIN | Published On : 23rd November 2020 06:07 AM | Last Updated : 23rd November 2020 06:07 AM | அ+அ அ- |

புழல் ஊராட்சியில் ஆய்வு செய்த திருவள்ளூா் மாவட்ட ஆட்சியா் பொன்னையா.
புழல் ஊராட்சி ஒன்றியத்தில் திருவள்ளூா் மாவட்ட ஆட்சியா் பொன்னையா ஞாயிற்றுக்கிழமை ஆய்வு செய்தாா்.
ஒன்றியத்தில் உள்ள புள்ளிலைன், அழிஞ்சிவாக்கம், வடகரை, விளாங்காடுபாக்கம் ஆகிய ஊராட்சிகளில் திட்டப் பணிகள் குறித்தும், வாக்காளா் பட்டியல் திருத்த சிறப்பு முகாம் பற்றியும் ஆய்வு செய்தாா்.
பொன்னேரி வட்டாட்சியா் மணிகண்டன், மாவட்ட வருவாய் அலுவலா் ஜெயகா்பிரபு, வட்டார வளா்ச்சி அலுவலா் அமிழ்தமன்னன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.