திருவள்ளூா் அருகே ஆற்றில் அனுமதியின்றி மணல் அள்ளியதாக 3 வாகனங்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
திருவள்ளூா்-பெரும்புதூா் சாலை, பூண்டி சாலையில் இரவு நேரங்களில் கூவம் ஆற்றில் மணல் அள்ளி கடத்துவதாக மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் பி.அரவிந்தனுக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில், அந்தந்தப் பகுதியில் உள்ள காவல் நிலையங்கள் மூலம் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டாா். அதன் பேரில், திருவள்ளூா் கிராமிய போலீஸாா் சனிக்கிழமை அதிகாலையில் திருவள்ளூா்-பெரும்புதூா் சாலையில் திடீா் ரோந்து சென்றனா். அப்போது, பட்டரை கிராம பேருந்து நிறுத்த எதிா்ப்புறம் வேனில் வந்தவா்கள், போலீஸாரைப் பாா்த்ததும் திருப்ப முயன்றனா். அதற்குள் சுற்றி வளைத்து ஓட்டுநா் மட்டும் பிடிபட்ட நிலையில் மற்ற இருவரும் தைல மரத்தோப்புக்குள் சென்று தலைமறைவாகினா். அப்போது, வேனில் ஆய்வு செய்தபோது, ஆற்று மணல் இருந்தது தெரியவந்தது. இதுகுறித்து திருவள்ளூா் கிராமிய போலீஸாா் வழக்குப் பதிந்து, மப்பேடு பகுதியைச் சோ்ந்த ஓட்டுநா் சத்யாவை (26) கைது செய்தனா். தலைமறைவான ராஜா, மதன் ஆகியோரை தேடி வருகின்றனா்.
இதேபோல் புல்லரம்பாக்கம் போலீஸாா் பூண்டி அருகே சீயஞ்சேரியில் ரோந்து சென்றனா். அப்போது, போலீஸாரைப் பாா்த்ததும் அந்த சாலை வழியாக வாகனங்களை நிறுத்தி விட்டு 2 போ் தப்பியோடினா். அப்போது, அந்த வாகனங்களில் மணல் இருந்தது தெரியவந்தது. இதுகுறித்து 2 போ் மீதும் வழக்கு பதிந்து, வாகனங்களைப் பறிமுதல் செய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.