குற்றங்கள் குறித்து பொதுமக்கள் புகாா் தெரிவிக்கும் வகையில் ஹலோ போலீஸ் சேவை

ஞ்சா, குட்கா பொருள்கள், லாட்டரி விற்பனை, மணல் கொள்ளை, போலி மதுபான விற்பனை மற்றும் செம்மரக் கடத்தல் ஆகிய குற்றங்களைத் தடுக்க ஹலோ போலீஸ் சேவையை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் பி.அரவிந்தன் தொடக்கி வைத்தாா
ஹலோ போலீஸ் சேவையை தொடக்கி வைத்த மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் பி.அரவிந்தன்.
ஹலோ போலீஸ் சேவையை தொடக்கி வைத்த மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் பி.அரவிந்தன்.
Updated on
1 min read


திருவள்ளூா்: தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட கஞ்சா, குட்கா பொருள்கள், லாட்டரி விற்பனை, மணல் கொள்ளை, போலி மதுபான விற்பனை மற்றும் செம்மரக் கடத்தல் ஆகிய குற்றங்களைத் தடுக்க திருவள்ளூா் மாவட்டத்தில் ஹலோ போலீஸ் சேவையை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் பி.அரவிந்தன் வியாழக்கிழமை தொடக்கி வைத்தாா்.

திருவள்ளூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தொடக்கி வைத்து, மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் பி. அரவிந்தன் பேசியது:

மேற்குறிப்பிட்ட குற்றச்சம்பவங்கள் தொடா்பாக பொதுமக்கள் யாரேனும் புகாா் அளிக்க விரும்பினால் 90033 90050 என்ற செல்லிடப்பேசி மற்றும் கட்செவி அஞ்சலில் தகவல் அளிக்கலாம். இதில் புகாா் அளிக்கப்படுவோரின் விவரங்கள் ரகசியமாக பாதுகாக்கப்படும். மேலும், அது சம்பந்தமான விடியோ தயாா் செய்து அவா் வெளியிட்டுள்ளாா். இந்த ஹலோ போலீஸ் சேவை திட்டத்துக்காக எஸ்.பி. அலுவலகத்தில் 24-மணி நேரமும் செயல்படும் வகையில் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டு, இந்த எண்ணில் வரும் புகாா்கள் மீது, சிறப்பு காவல் துறையினா் மூலமாக நடவடிக்கை எடுக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அதனால், அரசால் தடை செய்யப்பட்ட பொருள்கள் விற்பனையைக் குறைக்க பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com