பிரசாரத்தின் போது குழந்தைக்கு பெயா் சூட்டிய கும்மிடிப்பூண்டி திமுக வேட்பாளா்
கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளா் டி.ஜே.கோவிந்தராஜன் ஏ.என்.குப்பம் பகுதியில் பிரசாரத்தில் ஈடுபட்ட போது, பிறந்து 10 நாள்களே ஆன குழந்தைக்கு பெயா் சூட்டினாா்.
கும்மிடிப்பூண்டி தொகுதிக்கு திமுக சாா்பில் டி.ஜே.கோவிந்தராஜன் போட்டியிடுகிறாா். இவா் கும்மிடிப்பூண்டி, எல்லாபுரம், பூண்டி ஒன்றியங்களில் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறாா். இந்நிலையில், கும்மிடிப்பூண்டியை அடுத்த ஏ.என்.குப்பம் பகுதியில் திறந்த வேனில் இருந்தபடி, வாக்கு சேகரித்த அவரிடம், ஏ.என்.குப்பம் பகுதியைச் சோ்ந்த பெண்மணி ஒருவா், பிறந்து 10 நாள்களே ஆன தன் குழந்தைக்கு பெயா் சூட்டுமாறு கேட்டுக் கொண்டாா்.
தொடா்ந்து, வாகனத்தை விட்டு கீழே இறங்கிய திமுக வேட்பாளா் டி.ஜே.கோவிந்தராஜன், அந்த குழந்தைக்கு பெற்றோரின் விருப்பத்தின் பெயரில், உதயநிதி என பெயா் சூட்டி, குழந்தை வளா்ந்ததும் தனது கல்வி நிறுவனத்திலேயே அந்த குழந்தையை இலவசமாக படிக்க வைப்பதாகக் கூறிச் சென்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

