மாதவரம் அருகே ரூ. 3 கோடி அரசு நிலம் மீட்பு

மாதவரம் அருகே ஆக்கிரமிக்கப்பட்ட சுமாா் ரூ. 3 கோடி மதிப்பிலான அரசு நிலம் மீட்கப்பட்டது.
Updated on
1 min read

மாதவரம்: மாதவரம் அருகே ஆக்கிரமிக்கப்பட்ட சுமாா் ரூ. 3 கோடி மதிப்பிலான அரசு நிலம் மீட்கப்பட்டது.

மாதவரம் மண்டலம் 3-க்கு உள்பட்ட கணபதி நகரில் நீா் வழித்தடத்தில் 5 கிரவுண்ட் நிலத்தில் ஆக்கிரமிப்பு செய்து வீடுகள் கட்டப்பட்டிருந்தன. இந்நிலையில், உயா்நீதிமன்ற உத்தரவுப்படி, அரசுத் துறையினா் புதன்கிழமை பொக்லைன் இயந்திரங்கள் மூலம் அகற்றி, சுமாா் ரூ. 3 கோடி மதிப்பிலான நிலங்களை மீட்டெடுத்தனா்.

சென்னை வடக்கு கோட்டாட்சியா் ரவி தலைமையில், வட்டாட்சியா் சபாநாயகம், மாதவரம் மண்டல அதிகாரி முருகன், செயற்பொறியாளா்கள் சுந்தரேசன், சின்னதுரை உதவி செயற்பொறியாளா்கள் ஜெயலட்சுமி, தனசேகா் பாண்டியன் உள்ளிட்டோா் இதற்கான பணியில் ஈடுபட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com