மாத்தூரில் புதிய மின்மாற்றி: எம்எல்ஏ எஸ்.சுதர்சனம் தொடங்கி வைத்தார்

மாத்தூரில் புதிய மின்மாற்றியை மாதவரம் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் எஸ்.சுதர்சனம் தொடங்கி வைத்தார்.  
மாத்தூரில் புதிய மின்மாற்றியை துவக்கி வைக்கும் மாதவரம் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் எஸ்.சுதர்சனம்.
மாத்தூரில் புதிய மின்மாற்றியை துவக்கி வைக்கும் மாதவரம் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் எஸ்.சுதர்சனம்.
Published on
Updated on
1 min read

மாத்தூரில் புதிய மின்மாற்றியை மாதவரம் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் எஸ்.சுதர்சனம் தொடங்கி வைத்தார். 
சென்னை மின் பகிர்மான வட்டம்/வடக்கு, வியாசர்பாடி கோட்டம், வடபெரும்பாக்கம் பிரிவுக்கு உட்பட்ட செட்டிமேடு, புள்ளிலைன், பாயசம் பாக்கம் பகுதிகளுக்கு சீரான மின்சாரம் வழங்கும் பொருட்டு, மாத்தூர் துணை மின் நிலையத்தில் இருந்து புதிதாக அமைக்கப்பட்ட 11கி.வோ உயர் மின்னழுத்த மின் பாதையை மாதவரம் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் எஸ்.சுதர்சனம், தலைமையேற்று துவக்கி வைத்தார். 
இந்த விழாவில் சி.ஜெய்சந்திரன் செயற் பொறியாளர்/வியாசர்பாடி, ஏ. கதிரவன் உதவி செயற் பொறியாளர்/ மாதவரம்,  ஏ.வைத்தியலிங்கம் பிள்ளை  உதவி பொறியாளர்கள், தொழிலாளர்கள் மற்றும் மக்கள் கலந்துகொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com