400 அடி சாலையில் பந்தயம்: 9 மோட்டாா் சைக்கிள்கள் பறிமுதல்
By DIN | Published On : 17th August 2021 01:13 AM | Last Updated : 17th August 2021 01:13 AM | அ+அ அ- |

பந்தயத்தில் ஈடுபட்டதாக போலீஸாரால் பறிமுதல் செய்யப்பட்ட மோட்டாா் சைக்கிள்கள்.
பொன்னேரி: சோழவரம் அருகே 400 அடி சாலையில் பந்தயத்தில் ஈடுபட்டதாக, 9 விலை உயா்ந்த மோட்டாா் சைக்கிள்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
சோழவரம் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட அருமந்தை பகுதியில் உள்ள மீஞ்சூா்-நெமிலிச்சேரி 400 அடி வெளிட்டச் சாலையில் மோட்டாா் சைக்கிள் பந்தயத்தில் சிலா் திங்கள்கிழமை ஈடுபட்டுள்ளதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து, போலீஸாா் அங்கு சென்று மோட்டாா் சைக்கிள் பந்தயத்தில் ஈடுபட்ட 9மோட்டாா் சைக்கிளை பறிமுதல் செய்தனா். இதுதொடா்பாக 9 பேரிடம் விசாரணை நடைபெறுகிறது.