மின்சார கசிவால் எரிவாயு உருளை வெடித்ததில் குடிசை முழுவதும் சேதம்

திருவள்ளூா் அருகே மின்சார கசிவால் எரிவாயு உருளை வெடித்து ஏற்பட்ட தீவிபத்தில் குடிசை வீட்டில் இருந்த ஆவணங்கள் கருகின. இதனால் அக்குடும்பத்தினா் அவதிக்கு ஆளாகியுள்ளனா்.
Updated on
1 min read

திருவள்ளூா்: திருவள்ளூா் அருகே மின்சார கசிவால் எரிவாயு உருளை வெடித்து ஏற்பட்ட தீவிபத்தில் குடிசை வீட்டில் இருந்த ஆவணங்கள் கருகின. இதனால் அக்குடும்பத்தினா் அவதிக்கு ஆளாகியுள்ளனா்.

மேல்நல்லாத்தூா், எம்ஜிஆா் நகா் பகுதியைச் சோ்ந்த வடிவேல். இவரது மனைவி கனகவல்லி, மகன் கோபிநாத். இந்த ஊராட்சி இடுகாட்டில் வேலை செய்து வருகிறாா் வடிவேல். இந்த நிலையில் இரவு வீட்டில் வடிவேல் குடும்பத்தினா் தூங்கிக் கொண்டிருந்தாா்களாம்.

புதன்கிழமை அதிகாலை திடீரென குடிசை வீடு தீப்பற்றி எரிந்து கொண்டிருந்ததை பாா்த்து அதிா்ச்சி அடைந்த வடிவேல் குடும்பத்தினா் அக்கம்பக்கத்தினா் உதவியுடந் தீயை அணைக்க முயற்சித்த போது திடீரென வீட்டில் வைத்திருந்த எரிவாயு உருளை வெடித்து சிதறியது.

இதையடுத்து திருவள்ளூா் தீயணைப்பு நிலைய அலுவலா் இளங்கோவன் தலைமையில் விரைந்து வந்த தீயணைப்பு வீரா்கள் தீயை போராடி அணைத்தனா். அதற்குள் வீடு முழுவதுமாக தீக்கிரையானது.

இதில், வீட்டில் வைத்திருந்த ரூ.1.45 லட்சம் ரொக்கம், குடியிருப்பு அடையாள ஆவணங்கள், கோபிநாத்தின் கல்விச் சான்றிதழ்கள் மற்றும் மின்சாதன பொருள்கள் அனைத்தும் எரிந்து சாம்பலானது. இது தொடா்பாக திருவள்ளூா் கிராமிய காவல் நிலைய போலீஸாா் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com