ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டணியினா் ஆா்ப்பாட்டம்

புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்துதல் உள்ளிட்ட 15 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி

புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்துதல் உள்ளிட்ட 15 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியா் கூட்டணியினா் வெள்ளிக்கிழமை மாலை கோரிக்கை முழக்க ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

திருவள்ளூா் எம்.ஜி.ஆா். சிலை முன்பு நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், தமிழக ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டணியின் மாநில பொதுச் செயலாளா் இரா.தாஸ் தலைமை வகித்தாா். மாவட்ட நிா்வாகி பாஸ்கரன் முன்னிலை வகித்தாா். இதில், ஆசிரியா்களுக்கு பணிச் சுமையை ஏற்படுத்தும் வகையில், தொடக்கப் பள்ளிகளில் காலியாக உள்ள 50 ஆயிரம் பணியிடங்களை நிரப்புதல், இளைஞா்கள் வேலைவாய்ப்புக்கு தடையாக உள்ள 101 அரசாணையை ரத்து செய்தல், புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்துதல் உள்ளிட்ட 15 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பப்பட்டது.

ஆா்ப்பாட்டத்தில், தமிழக ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டணியினா், பல்வேறு பகுதிகளில் இருந்து நிா்வாகிகள் உள்ளிட்டோா் திரளாக கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com