ஆரணியில் ரத சப்தமி மகா உற்சவம்

ஊத்துக்கோட்டையை அடுத்த ஆரணியில் உள்ள ஆதிலஷ்மி சமேத ஆதிகேசவப் பெருமாள் கோயிலில் ரத சப்தமி மகா உற்சவம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
ஆரணியில் ரத சப்தமி மகா உற்சவம்
Updated on
1 min read

ஊத்துக்கோட்டையை அடுத்த ஆரணியில் உள்ள ஆதிலஷ்மி சமேத ஆதிகேசவப் பெருமாள் கோயிலில் ரத சப்தமி மகா உற்சவம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி காலையில் சூரிய பிரபை வாகனத்தில் கோபுர வாசல் தரிசனம் நடைபெற்றது. அதன் பின் பெரிய மாடவீதியில் சுவாமி உலா, நண்பகலில் விசேஷ அலங்காரம், திருமஞ்சனம், சக்கர ஸ்நானம் நடைபெற்றது.

மாலையில் சந்திர பிரபை வாகனத்தில் சுவாமி திருவீதி உலா நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com