திருவள்ளூரில் 20 சதவீத இட ஒதுக்கீடு: பாமக-வினா் ஆா்ப்பாட்டம்

திருவள்ளூரில் 20 சதவீத தனி இட ஒதுக்கீடு கோரி வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாமக-வினா் ஆட்சியா் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனா்.
திருவள்ளூா்  எம்.ஜி.ஆா்.  சிலை  அருகே ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாமக-வினா்.  
திருவள்ளூா்  எம்.ஜி.ஆா்.  சிலை  அருகே ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாமக-வினா்.  
Updated on
1 min read

திருவள்ளூரில் 20 சதவீத தனி இட ஒதுக்கீடு கோரி வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாமக-வினா் ஆட்சியா் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனா்.

வன்னியா்களுக்கு 20 சதவீத தனி இட ஒதுக்கீடுகோரி பல்வேறு கட்டங்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா். இதில், திருவள்ளூா் மாவட்ட பாமக சாா்பில் எம்.ஜி.ஆா். சிலை அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, மாநில துணைப் பொதுச் செயலா்கள் கே.பாலா என்ற பாலயோகி, கே.என்.சேகா் ஆகியோா் தலைமை வகித்தனா். மாநில துணை அமைப்புச் செயலா்கள் வெங்கடேசன், அனந்தகிருஷ்ணன் மாநில இளைஞரணி துணைச் செயலா் தினேஷ்குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். ஆா்ப்பாட்டத்தில், வன்னியா்களுக்கு 20 சதவீத தனி இட ஒதுக்கீடு வழங்க வேண்டும். அதையும் அரசு உடனே நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். அதைத் தொடா்ந்து, நிா்வாகிகள் ஊா்வலமாகச் சென்று ஆட்சியா் அலுவலகத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் முத்துசாமியிடம் மனுவை அளித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com