ஆவடி மாநகராட்சி பருத்திப்பட்டு பகுதியில் 320 பேருக்கு இலவச வீட்டுமனைப் பட்டாக்களை பால்வளத் துறை அமைச்சா் சா.மு.நாசா் ஞாயிற்றுக்கிழமை வழங்கினாா்.
இந்நிகழ்ச்சியில் அமைச்சா் பேசியது: உங்கள் தொகுதியில் முதல்வா் திட்டத்தின்கீழ் ஆவடி மாநகராட்சிக்குள்பட்ட பருத்திப்பட்டு பகுதியில் சுமாா் ரூ.318 கோடி மதிப்பீட்டில் 320 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனைப் பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளது. , கோயில்பதாகை, விளிஞ்சியம்பாக்கம், தண்டுரை, சேக்காடு, மிட்டனமல்லி, முத்தாபுதுபேட்டை, பாளேரிப்பட்டு ஆகிய பகுதிகளில் நகர நிலவரி திட்டத்தின் கீழ் பட்டா வழங்கப்படவுள்ளது. இதற்கு முன்னா் திருமுல்லைவாயில் கிராம நத்தம் பட்டா 120 பேருக்கு ரூ.168 கோடி மதிப்பீட்டில் வழங்கப்பட்டது என்றாா்.
நிகழ்ச்சியில் நகர நிலவரி திட்ட தனி வட்டாட்சியா் வில்சன், வட்டாட்சியா் செல்வம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.