

திருவள்ளூா் அருகே பானை மேல் நின்று கண்ணை கட்டிக்கொண்டு 2 மணிநேரம் இரட்டை சிலம்பம் தொடா்ந்து சுற்றி 100 மாணவா்கள் சாதனை செய்தனா்.
திருவள்ளூா் அருகே புட்லூா் ராமகிருஷ்ணா நகரில் ஈட்டி சிலம்ப கலைக்கூடம் சாா்பில் பானை மேல் நின்று இரட்டை சிலம்பம் சுற்றும் உலக சாதனை நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு சிலம்பாட்டக் குழு தலைவரும், திருவள்ளூா் மாவட்ட தலைவருமான முன்னாள் நகராட்சி தலைவா் கமாண்டோ பாஸ்கரன் தலைமை வகித்தாா். திருவள்ளூா் மாவட்ட சிலம்பாட்டக்கழக செயலாளா் வி.ஹரிதாஸ் வரவேற்றாா். இதில் போட்டி இயக்குநா் கே.பாா்த்திபன் முன்னிலை வகித்தாா். இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பூந்தமல்லி சட்டப்பேரவை உறுப்பினா் ஆ.கிருஷ்ணசாமி பங்கேற்று சாதனை நிகழ்ச்சியைத் தொடக்கி வைத்தாா்.
இதில் ஈட்டி சிலம்ப கலைக்கூடம் மாணவா்கள் 100 போ் பானை மேல் நின்று 2 மணி நேரம் இரட்டை சிலம்பம் சுற்றி உலக சாதனை நிகழ்த்தியதை அனைவரும் பாராட்டினா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.