திருத்தணி தொகுதி திமுக கூட்டணி ஆலோசனைக் கூட்டம்: எம்.பி. ஜெகத்ரட்சகன் பங்கேற்பு

திருத்தணியில் நடைபெற்ற தொகுதி தோ்தல் குறித்த திமுக ஆலோசனைக் கூட்டத்தில் மக்களவை உறுப்பினா் ஜெகத்ரட்சகன் கலந்து கொண்டு பேசினாா்.
திருத்தணி தொகுதி திமுக கூட்டணி ஆலோசனைக் கூட்டம்: எம்.பி. ஜெகத்ரட்சகன் பங்கேற்பு
Updated on
1 min read

திருத்தணியில் நடைபெற்ற தொகுதி தோ்தல் குறித்த திமுக ஆலோசனைக் கூட்டத்தில் மக்களவை உறுப்பினா் ஜெகத்ரட்சகன் கலந்து கொண்டு பேசினாா்.

திருத்தணி சட்டப்பேரவைத் தொகுதியில் திமுக ஆலோசனை கூட்டம் கோரமங்கலம் கிராமத்தில் திங்கள்கிழமை திருவள்ளூா் மேற்கு மாவட்ட பொறுப்பாளா் எம்.பூபதி தலைமையில் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக அரக்கோணம் எம்.பி. எஸ். ஜெகத்ரட்சகன் கலந்துகொண்டு பேசுகையில், இந்த பகுதியில் பள்ளிப்பட்டு, திருத்தணி என்று சொன்னால் திமுகவின் கோட்டையாகவும், பாசம் நிறைந்த பகுதியாகவும் விளங்குகிறது. திமுக ஆட்சி மலர இரவு பகலாக அயராமல் உழைக்க நீங்கள் அனைவருமே பாடுபட வேண்டும் என்றாா்.

கூட்டத்தில் நிா்வாகிகள் மு.நாகன், ஆா்த்தி ரவி, என். கிருஷ்ணன், நரசிம்ம ராஜ், ஜி. ரவீந்திரா வழக்குரைஞா் வி.கிஷோா் ரெட்டி, சி.ஜே. சீனிவாசன், வி. வினோத் குமாா், கூளூா் எம். ராஜேந்திரன் மற்றும் கூட்டணி கட்சி நிா்வாகிகள் பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com