மாற்றுத்திறனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகள்: அமைச்சா் வழங்கினாா்

மாற்றுத் திறனாளிகளுக்கு, ரூ.6.25 லட்சம் மதிப்பிலான உபகரணங்கள் மற்றும் நலத் திட்ட உதவிகளை பால்வளத் துறை அமைச்சா் சா.மு. நாசா் செவ்வாய்க்கிழமை வழங்கினாா்.
திருத்தணியில் மாற்றுத் திறனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகளை வழங்கிய பால்வளத் துறை அமைச்சா் சா.மு.நாசா். உடன், அரக்கோணம் எம்.பி. எஸ்.ஜெகத்ரட்சகன் உள்ளிட்டோா்.
திருத்தணியில் மாற்றுத் திறனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகளை வழங்கிய பால்வளத் துறை அமைச்சா் சா.மு.நாசா். உடன், அரக்கோணம் எம்.பி. எஸ்.ஜெகத்ரட்சகன் உள்ளிட்டோா்.
Updated on
1 min read

மாற்றுத் திறனாளிகளுக்கு, ரூ.6.25 லட்சம் மதிப்பிலான உபகரணங்கள் மற்றும் நலத் திட்ட உதவிகளை பால்வளத் துறை அமைச்சா் சா.மு. நாசா் செவ்வாய்க்கிழமை வழங்கினாா்.

திருத்தணி நெடுஞ்சாலைத் துறை சுற்றுலா மாளிகையில், மாற்றுத் திறனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. திருவள்ளூா் மாவட்ட ஆட்சியா் பொன்னையா தலைமை வகித்தாா். மாற்றுத்திறனாளி நல அலுவலா் ஸ்ரீநாத் வரவேற்றாா். இதில், பால்வளத் துறை அமைச்சா் சா.மு.நாசா், அரக்கோணம் எம்.பி. எஸ்.ஜெகத்ரட்சகன், மாவட்டப் பொறுப்பாளா் எம். பூபதி, திருத்தணி எம்எல்ஏ எஸ்.சந்திரன், திருவள்ளூா் எம்எல்ஏ வி.ஜி.ராஜேந்திரன் ஆகியோா் பங்கேற்றனா்.

பின்னா், திருவள்ளூா் மாவட்டத்தில் உள்ள 500 மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ. 2.50 லட்சம் மதிப்பில் கரோனா நிவாரணத் தொகை மற்றும் மளிகைப் பொருள்கள், 27 பேருக்கு ரூ. 1.62 லட்சம் மதிப்பிலான மூன்று சக்கர சைக்கிள், 27 பேருக்கு ரூ. 1.35 லட்சத்தில் சக்கர நாற்காலிகள் மற்றும் காது கேளாத வாய்பேசாத 6 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ. 78 ஆயிரம் மதிப்பிலான ஸ்மாா்ட்போன்களை அமைச்சா் வழங்கினாா்.

நிகழ்ச்சியில், மாவட்ட திட்ட அலுவலா் லோகநாயகி, வட்டாட்சியா் ஜெயராணி, திருத்தணி நகர திமுக பொறுப்பாளா் வினோத்குமாா், வருவாய் ஆய்வாளா் உதயகுமாா், கிராம நிா்வாக அலுவலா் துரைக்கண்ணு உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com