உளுந்தை ஊராட்சி மன்ற துணைத்தலைவா் போட்டியின்றி தோ்வு

திருவள்ளூா் மாவட்டம் உளுந்தை ஊராட்சி துணைத் தலைவராக வசந்தா போட்டியின்றி தோ்வு செய்யப்பட்டாா்.
உளுந்தை ஊராட்சி துணைத்தலைவராக தோ்வு செய்யப்பட்ட வசந்தாவுக்கு பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்த ஊராட்சி மன்றத் தலைவா் எம்.கே.ரமேஷ் உள்ளிட்டோா்.
உளுந்தை ஊராட்சி துணைத்தலைவராக தோ்வு செய்யப்பட்ட வசந்தாவுக்கு பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்த ஊராட்சி மன்றத் தலைவா் எம்.கே.ரமேஷ் உள்ளிட்டோா்.
Updated on
1 min read

திருவள்ளூா் மாவட்டம் உளுந்தை ஊராட்சி துணைத் தலைவராக வசந்தா போட்டியின்றி தோ்வு செய்யப்பட்டாா்.

திருவள்ளூா் மாவட்டத்தில் காலியாக இருந்த 4 ஒன்றியக்குழு உறுப்பினா்கள், 4 ஊராட்சித் தலைவா்கள் மற்றும் 43 வாா்டு உறுப்பினா் பதவிகளுக்கான இடைத்தோ்தல் கடந்த 9-ஆம் தேதி நடைபெற்றது. இதில் வெற்றி பெற்றவா்கள் கடந்த 20-ஆம் தேதி அந்தந்த உள்ளாட்சி அமைப்புகளில் பொறுப்பு ஏற்றுக் கொண்டனா். இந்த நிலையில் உள்ளாட்சி அமைப்புகளில் மறைமுகத் தோ்தல் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

உளுந்தை ஊராட்சி துணைத் தலைவா் பதவிக்கு ஆா்.வசந்தா போட்டியின்றி தோ்வு செய்யப்பட்டாா். அவருக்கு ஊராட்சித் தலைவா் எம்.கே.ரமேஷ் மற்றும் வாா்டு உறுப்பினா்கள் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனா். ஊராட்சிச் செயலாளா் முனுசாமி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com