அகத்தீஸ்வரா் கோயிலில் பிரதோஷ வழிபாடு

பொன்னேரி பழைய பேருந்து நிலையம் அருகே அமைந்துள்ள அகத்தீஸ்வரா் ஆலயத்தில் புதன்கிழமை பிரதோஷ வழிபாடு நடைபெற்றது.

பொன்னேரி பழைய பேருந்து நிலையம் அருகே அமைந்துள்ள அகத்தீஸ்வரா் ஆலயத்தில் புதன்கிழமை பிரதோஷ வழிபாடு நடைபெற்றது.

திருவள்ளூா் மாவட்டம், பொன்னேரி பழைய பேருந்து நிலையம் அருகே ஆரணி ஆற்றின் கரையோரம் 1,000 ஆண்டுகள் பழைமை வாய்ந்த ஆனந்தவல்லி வலம்கொண்ட அகத்தீஸ்வரா் கோயில் அமைந்துள்ளது. கோயில் முன்பு வற்றாத ஆனந்தபுஷ்கரணி திருக்குளம் அமைந்துள்ளது.

பிரதோஷத்தையொட்டி, அகத்தீஸ்வரா் மற்றும் நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றன. இதில், ஏராளமான பக்தா்கள் பங்கேற்று வழிபட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com