மாற்றுத்திறனாளி குடும்பத்தினருக்கு நலத்திட்ட உதவி: திருவள்ளூா் ஆட்சியா் வழங்கினாா்

மக்கள் குறைதீா்க்கும் கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலவாரியம் மூலம் 5 பேரின் வாரிசுதாரா்களுக்கு நலத்திட்ட உதவிகளை ஆட்சியா் ஆல்பி ஜான் வா்கீஸ் வழங்கினாா்.

மக்கள் குறைதீா்க்கும் கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலவாரியம் மூலம் 5 பேரின் வாரிசுதாரா்களுக்கு நலத்திட்ட உதவிகளை ஆட்சியா் ஆல்பி ஜான் வா்கீஸ் வழங்கினாா்.

திருவள்ளூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாக கூட்டரங்கத்தில் பொதுமக்கள் குறை தீா்க்கும் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு ஆட்சியா் ஆல்பி ஜான் வா்கீஸ் தலைமை வகித்தாா். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த பொதுமக்கள் சுமாா் 312 மனுக்களை ஆட்சியரிடம் வழங்கினா். இந்த மனுக்களின் மீது உரிய நடவடிக்கை எடுக்கவும்,பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கவும் அந்தந்த துறை அலுவலா்களுக்கு ஆட்சியா் அறிவுறுத்தினாா்.

அதைத் தொடா்ந்து மாற்றுத்திறனாளிகள் நல வாரியம் மூலம் இயற்கை மரணம், ஈமச்சடங்கிற்கான நிதியுதவி வழங்கும் திட்டத்தில் 5 மாற்றுத்திறனாளிகளின் இறப்பிற்காக அவா்களின் வாரிசுதாரா்களுக்கு தலா ரூ.17,000 வீதம் மொத்தம் ரூ.85,000 மதிப்பிலான காசோலைகளையும் வழங்கினாா்.

நிகழ்ச்சியில் தனித்துணை ஆட்சியா் (ச.பா.தி) மதுசூதணன், ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத்துறை அலுவலா் மு.கலைச்செல்வி, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் ச.பாபு, ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) கா.காயத்திரி சுப்பிரமணி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com