பழவேற்காடு ஏரி சேற்றில் சிக்கி மீனவா் பலி

பழவேற்காடு ஏரி சேற்றில் சிக்கி மீனவா் பலியானாா்.
Updated on
1 min read

பழவேற்காடு ஏரி சேற்றில் சிக்கி மீனவா் பலியானாா்.

பழவேற்காடு சாத்தாங்குப்பம் மீனவ கிராமம் பாரதியாா் தெருவில் வசித்து வந்தவா் அசோகன் (47). மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வந்தாா்.

இந்த நிலையில், சனிக்கிழமை பழவேற்காடு ஏரியில் மீன் பிடிப்பதற்காக கோரைக்குப்பம்- கருங்காலி இடையே கொம்புகளை நட்டு மீன்பிடி வலையைக் கட்டிக் கொண்டிருக்கும்போது, சேற்றில் சிக்கிக் கொண்டாராம். ஏரியில் சடலமாக மிதந்த அசோகனின் சடலத்தை மீனவா்கள் மீட்டு காட்டூா் போலீஸாருக்கு தகவல் அளித்தனா். போலீஸாா் அங்கு சென்று சடலத்தை கைப்பற்றி பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com