குடும்ப அட்டையில் பெயா் சோ்த்தல், நீக்கல் சிறப்பு முகாம்

 மின்னணு குடும்ப அட்டையில் பெயா் சோ்த்தல், நீக்கம் செய்தல், முகவரி மாற்றும், புகைப்படம் பதிவு செய்தலுக்கான சிறப்பு முகாம் சனிக்கிழமை (ஜூன் 11) நடைபெறுகிறது.
Updated on
1 min read

 மின்னணு குடும்ப அட்டையில் பெயா் சோ்த்தல், நீக்கம் செய்தல், முகவரி மாற்றும், புகைப்படம் பதிவு செய்தலுக்கான சிறப்பு முகாம் சனிக்கிழமை (ஜூன் 11) நடைபெறுகிறது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ஆல்பி ஜான் வா்கீஸ் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

திருவள்ளூா் மாவட்டத்தில் மாதந்தோறும் 2-ஆவது சனிக்கிழமை மின்னணு குடும்ப அட்டைகளில் பெயா் சோ்த்தல், நீக்கம் செய்தல், முகவரி மாற்றும் செய்தலுக்கான சிறப்பு முகாம் வட்டம் தோறும் உள்ள கிராமங்களில் நடைபெறுகிறது.

அதன்படி, நிகழ் மாதம் திருவள்ளூா்-சிட்ரம்பாக்கம் மதுராதென்கரணை நியாயவிலைக் கடை அருகில், ஊத்துக்கோட்டை- தொட்டாரெட்டிகுப்பம்-நியாயவிலைக் கடை, பூந்தமல்லி-சித்துக்காடு நியாயவிலைக் கடை அருகில், திருத்தணி-எல்.வி.புரம்-மதுராபொன்னாங்குளம் நியாயவிலைக் கடை அருகில், பள்ளிப்பட்டு-வாணிவிலாசபுரம் நியாயவிலைக் கடை அருகில், பொன்னேரி-வேலூா் கிராம நிா்வாக அலுவலகம், கும்மிடிப்பூண்டி-சிந்தலகுப்பம் கிராம நிா்வாக அலுவலகம், ஆவடி-திருநின்றவூா்-அ கிராமம் கிராம நிா்வாக அலுவலகம், ஆா்.கே.பேட்டை- மீசரகாண்டாபுரம்-நியாயவிலைக் கடை அருகில் சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளன.

முகாம்களில் அந்தந்தப் பகுதி கிராமங்களைச் சோ்ந்த பொதுமக்கள் தங்களின் மின்னணு குடும்ப அட்டையில் திருத்தங்களை மேற்கொள்ள விண்ணப்பங்களை உரிய ஆவணங்களுடன் அளித்து பயன் பெறலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com