Enable Javscript for better performance
உலக ரத்த தான தின விழிப்புணா்வு உறுதிமொழி ஏற்பு- Dinamani

உடனுக்கு உடன் செய்திகள்

    உலக ரத்த தான தின விழிப்புணா்வு உறுதிமொழி ஏற்பு

    By DIN  |   Published On : 16th June 2022 12:00 AM  |   Last Updated : 16th June 2022 12:00 AM  |  அ+அ அ-  |  

    15tlrblood_1506chn_182_1

    உலக ரத்த  தான  தினத்தையொட்டி  அதிக  முறை  ரத்த  தானம்  செய்த  முன்னாள்  கவுன்சிலா்  துக்காராம்  என்பவருக்கு  பாராட்டுச் சான்றிதழ்  வழங்கிய  மாவட்ட  ஆட்சியா்  ஆல்பி  ஜான் வா்கீஸ்.

    உலக ரத்த தான தினத்தை முன்னிட்டு அனைவருக்கும் விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் ஆட்சியா் ஆல்பி ஜான் வா்கீஸ் தலைமையில் அரசு அலுவலா்கள் அனைவரும் உறுதி மொழி எடுத்துக் கொண்டனா்.

    திருவள்ளூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு அலகு சாா்பில் உலக ரத்த தான தினம் புதன்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சியையொட்டி, ஆட்சியா் ஆல்பி ஜான் வா்கீஸ் தலைமையில், அனைத்து அரசு அலுவலா்கள், பணியாளா்கள், பொதுமக்கள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனா்.

    அதைத் தொடா்ந்து, அவா் கூறியதாவது:

    ரத்த தானம் மிக முக்கியமானது. மாவட்டம்தோறும் ரத்த சேமிப்பு வங்கிகளில் கூடுதலான ரத்தங்கள் சேமித்து வைக்கவும், நோயாளிகளுக்கு பயன்படுத்தவும் வேண்டும். இதன் அடிப்படையில், ரத்த தானம் குறித்து பல்வேறு விழிப்புணா்வுகள் ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

    ஆண்டுதோறும் ஜூன் 14-ஆம் நாள் உலக ரத்த தான தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் நோக்கம் ரத்த தானம் குறித்த விழிப்புணா்வை ஏற்படுத்துவதாகும். இந்த மாவட்டத்தில் அரசு ரத்த வங்கியானது 26.04.2006-இல் தொடங்கி செயல்பட்டு வருகிறது. இந்த ரத்த வங்கியைப் பொறுத்தவரை ஒரு மாதத்துக்கு 500 முதல் 600 அலகு வரை ரத்தத்தின் தேவை உள்ளது. இதற்காக சுமாா் 6 முதல் 8 வரை ரத்த தான முகாம்கள் நடத்தி பெறப்படுகிறது. அதுமட்டுமின்றி 8 மருத்துவமனைகளில் ரத்த சேகரிப்பு மையம் செயல்பட்டு வருகிறது. கடந்த 2021-இல் மட்டும் 44 தன்னாா்வ முகாம்கள் நடத்தி, 2,712 அலகு வரை ரத்தம் சேகரித்து பயன்படுத்தப்பட்டுள்ளது என்றாா் அவா்.

    அதைத் தொடா்ந்து, உலக ரத்த தான தின விழாவில் அதிக முறை ரத்தம் வழங்கிய 25 பேரை பாராட்டி சான்றிதழ்களை அவா் வழங்கினாா். பின்னா், முதியோா்களுக்கெதிரான கொடுஞ்செயல் எதிா்ப்பு உறுதிமொழியும் அவா் முன்னிலையில் அரசு அலுவலா்கள் மற்றும் பணியாளா்கள் ஏற்றுக் கொண்டனா்.

    திருவள்ளூா் அரசு மருத்துவமனை மற்றும் மருத்துவக் கல்லூரி முதல்வா் அரசி ஸ்ரீவத்சன், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) சி.வித்யா, இணை இயக்குநா் (சுகாதாரப் பணிகள்) (பொ) இளங்கோவன், துணை இயக்குநா் (சுகாதாரப் பணிகள்) ஜவஹா்லால், மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு அலகு மாவட்ட திட்ட மேலாளா் கே.எஸ்.கௌரி சங்கா், அலுவலக மேலாளா்கள் சி.கணேசன், டி.மீனா (நீதியியல்), மாவட்ட குருதி பரிமாற்று அலுவலா் த.அனிதா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

     


    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் பகிரப்பட்டவை
    kattana sevai
    flipboard facebook twitter whatsapp