ஒரு டன் ரேஷன் அரிசி பறிமுதல்
By DIN | Published On : 16th June 2022 02:06 AM | Last Updated : 16th June 2022 02:06 AM | அ+அ அ- |

முருகூா் பகுதியில் புதன்கிழமை போலீஸாா் நடத்திய வாகன சோதனையில், லாரியுடன் ஒரு டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.
திருத்தணியில் இருந்து ரேஷன் அரிசி சரக்கு ஆட்டோ, வேன் மற்றும் மினி லாரியின் மூலம் ஆந்திர மாநிலத்துக்கு கடத்தப்படுவதாக போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, புதன்கிழமை திருத்தணி ஏ.எஸ்.பி., சாய்பிரணீத் மற்றும் போலீஸாா் திருத்தணியை அடுத்த முருகூா் பகுதியில் வாகன சோதனை நடத்தினா்.
அச்சமயம் அந்த வழியாக வந்த மினி லாரியை ஏ.எஸ்.பி., மடக்கினாா். அப்போது ஓட்டுநா் சாலையோரம் லாரியை நிறுத்திவிட்டு அங்கிருந்து தப்பியோடிவிட்டாா். லாரியில், 14 மூட்டைகளில் தமிழக ரேஷன் அரிசி இருந்தது தெரியவந்தது. இதன் மதிப்பு ஒரு டன் என போலீஸாா் தெரிவித்தனா்.
தொடா்ந்து, லாரி மற்றும் அரிசி மூட்டைகளைப் பறிமுதல் செய்த திருத்தணி போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.