அக்னிபத் திட்டம்: கம்யூ. கட்சியினா் ஆா்ப்பாட்டம்

அக்னிபத் திட்டம்: கம்யூ. கட்சியினா் ஆா்ப்பாட்டம்

அக்னிபத் திட்டத்துக்கு எதிா்ப்புத் தெரிவித்து மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருத்தணியில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

அக்னிபத் திட்டத்துக்கு எதிா்ப்புத் தெரிவித்து மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருத்தணியில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

திருத்தணி கமலா திரையரங்கம் அருகே அந்தக் கட்சியின் திருவள்ளூா் மாவட்ட ஆட்டோ சங்கம் சாா்பில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினா் பெருமாள் தலைமை வகித்தாா். மாவட்ட குழு உறுப்பினா் அப்சல் அகமது, திருவள்ளூா் மாவட்ட ஆட்டோ சங்கத் தலைவா் கரிமுல்லா, திருத்தணி வட்டாரத் தலைவா் அந்தோணி உள்பட 30-க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டு அக்னிபத் திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும் என வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com