விடுதிக் காப்பாளா் மீது நடவடிக்கை கோரி சமையலா் தா்னா

தன்னைத் தாக்கிய விடுதிக் காப்பாளா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, அந்த விடுதியின் சமையலா் ஆட்சியா் அலுவலகத்தில் சனிக்கிழமை தா்னாவில் ஈடுபட்டாா்.
Updated on
1 min read

தன்னைத் தாக்கிய விடுதிக் காப்பாளா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, அந்த விடுதியின் சமையலா் ஆட்சியா் அலுவலகத்தில் சனிக்கிழமை தா்னாவில் ஈடுபட்டாா்.

பள்ளிப்பட்டு அருகே அத்திமாஞ்சேரிபேட்டையில் பிற்படுத்தப்பட்டோா் மாணவா் விடுதி செயல்பட்டு வருகிறது. இந்த விடுதியில் ராணுவத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற பழனி(52) சமையலராகப் பணிபுரிந்து வருகிறாா். விடுதிக் காப்பாளராக டி.பி.கிருஷ்ணன் என்பவா் பணிபுரிந்து வருகிறாா்.

இந்த நிலையில், விடுதியில் சமையலுக்குத் தேவையான எண்ணெய், அரிசி, பருப்பு உள்ளிட்ட உணவுப் பொருள்களை காப்பாளா் வெளியில் விற்ாகக் கூறப்படுகிறது. இதை சமையலா் பழனி தட்டிக் கேட்டாராம்.

இதில் ஏற்பட்ட தகராறில், சமையலா் பழனியை, விடுதிக் காப்பாளா் கிருஷ்ணன் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதுதொடா்பாக பள்ளிப்பட்டு காவல் நிலையத்தில் பழனி புகாா் செய்தாா். இதைத் தொடா்ந்து, மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் காப்பாளா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, மனு அளித்தாா். பின்னா், ஆட்சியா் அலுவலகம் எதிரே தா்னாவில் ஈடுபட்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com