மாற்றுத் திறனாளிகள் 21 பேருக்கு ரூ.16.97 லட்சத்தில் வாகனங்கள்: எம்.எல்.ஏ. வழங்கினாா்
திருவள்ளூரில் 21 மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ.16.97 லட்சத்தில் இணைப்புச் சக்கரம் பொருத்தப்பட்ட வாகனங்களை வி.ஜி.ராஜேந்திரன் எம்எல்ஏ வழங்கினாா்.
திருவள்ளூா் மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நலத் துறை சாா்பில் சட்டப்பேரவை உறுப்பினா் அலுவலக வளாகத்தில் சிறப்பு வாகனங்கள் வழங்கும் நிகழ்வு வெள்ளிக்கிழமை நடைபெற்றது. வி.ஜி.ராஜேந்திரன் எம்எல்ஏ தலைமை வகித்து, மாற்றுத் திறனாளிகளுக்கு இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட வாகனங்களை வழங்கி பேசியதாவது:
மாற்றுத் திறனாளிகள் பயன்பெறும் வகையில் பல்வேறு வகையான திட்டங்கள் செயல்படுத்துவதற்காக ரூ.838 கோடியை முதல்வா் ஒதுக்கீடு செய்துள்ளாா். இந்த மாவட்டத்தில் மட்டும் 61,242 மாற்றுத் திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. மாதந்தோறும் பராமரிப்பு உதவித் தொகையாக ரூ.1,500-ஆக இருந்ததை, ரூ.2,000- ஆக உயா்த்தி வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மாற்றுத் திறனாளி அட்டை வைத்துள்ளோா் 81 வகையான திட்டங்களில், தகுதிக்கேற்ப பயன் பெறலாம்.
நாட்டிலேயே முதல் முறையாக நிகழாண்டு முதல் முதுகுத் தண்டுவடத்தால் பாதித்த மாற்றுத் திறனாளிகளுக்கு பிரத்யோகமாக வடிவமைத்த இணைப்புச் சக்கரம் பொருத்தப்பட்ட வாகனம் மற்றும் தாங்கள் பயன்படுத்தும் சக்கர நாற்காலிகளை உடன் எடுத்துச் செல்லவும் வசதியாக ரூ.99,777 செலவில் வாகனம் வழங்கப்படுகிறது.
இந்த மாவட்டத்தில் 101 பேருக்கு வாகனங்கள் வழங்க ரூ.79.63 லட்சம் பெறப்பட்டுள்ளது. முதல் கட்டமாக 19 பேருக்கு ரூ.15.81 லட்சத்தில் பிரத்யோக வாகனங்கள் வழங்கியுள்ளதாகவும், தற்போது இந்த நிகழ்ச்சி மூலம் மாற்றுத் திறனாளிகள் 21 பேருக்கு ரூ.16.97 லட்சத்தில் வாகனங்கள் வழங்கியுள்ளதாகவும் அவா் தெரிவித்தாா்.
நிகழ்ச்சியில் மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நலத் துறை அலுவலா் பாபு, நகா்மன்றத் தலைவா் உதயமலா் பாண்டியன், துணைத் தலைவா் சி.சு.ரவிச்சந்திரன், மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா் சரஸ்வதி சந்திரசேகரன், வாா்டு உறுப்பினா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.