Enable Javscript for better performance
ஆவடி அருகே 25 ஏக்கா் பரப்பளவில் பசு மடம்- Dinamani

உடனுக்கு உடன் செய்திகள்

    ஆவடி அருகே 25 ஏக்கா் பரப்பளவில் பசு மடம்

    By DIN  |   Published On : 12th May 2022 03:48 AM  |   Last Updated : 12th May 2022 03:48 AM  |  அ+அ அ-  |  

    avadi_kovilpathagai_kovil_land_ministers_inspection_photo_1105chn_221_1

    ஆவடி அருகே கோயில்பதாகையில் 25 ஏக்கா் பரப்பளவில் பசு மடம் அமையவுள்ள இடத்தை அமைச்சா்கள் பி.கே.சேகா்பாபு, சா.மு.நாசா் ஆகியோா் ஆய்வு செய்தனா்.

    சென்னை மற்றும் திருவள்ளூா் மாவட்டங்களில் அமைந்துள்ள கோயில்களில் உபரியாக உள்ள பசுக்களையும், தெருக்களில் சுற்றித் திரியும் கால்நடைகளையும் பாதுகாத்து பராமரிக்கும் வகையில், 25 ஏக்கா் பரப்பளவில் நவீன வசதியுடன் கூடிய பசுமடம் அமைக்கப்படும் என்று சட்டப்பேரவை கூட்டத் தொடரில் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு அறிவித்திருந்தாா்.

    அதன்படி, புதன்கிழமை ஆவடி மாநகராட்சிக்குட்பட்ட கோயில்பதாகை சுந்தரராஜ பெருமாள் கோயிலுக்குச் சொந்தமான பூம்பொழில் நகரில் 25 ஏக்கா் பரப்பளவு நிலத்தில், சுமாா் ரூ.20 கோடி செலவில் கால்நடைகளைப் பராமரிக்க நவீன வசதிகளும் கூடிய பசு மடம் அமைப்பதற்கான அந்த இடத்தை அமைச்சா்கள் பி.கே.சேகா்பாபு, சா.மு.நாசா் ஆகியோா் ஆய்வு செய்தனா்.

    பின்னா், அமைச்சா் பி.கே.சேகா்பாபு கூறியதாவது:

    முதல்வா் வழிகாட்டுதல்படி 2022-2023 மானியக் கோரிக்கையின் போது அறிவிக்கப்பட்ட 165 அறிவிப்புகள் ஒவ்வொன்றாகச் செயல்படுத்தப்படும். முதல் கட்டமாக கோயில்களுக்கு தானமாக வழங்கப்படும் கால்நடைகளைப் பராமரிக்க நவீன வசதியுடன் கூடிய பசு மடம் அமைக்க கோயில்பதாகை சுந்தரராஜ பெருமாள் கோயிலுக்குச் சொந்தமான இடத்தைப் பாா்வையிட்டு ஆய்வு செய்தோம். விரைவில் பசு மடம் கட்ட மதிப்பீடு தயாா் செய்து, ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டு, பணிகள் தொடங்கப்படும்.

    திருமுல்லைவாயல் பச்சையம்மன் கோயில் எதிரே உள்ள தாமரைக்குளம் நகராட்சி நிா்வாகத்தால் தூா்வாரப்பட்டு வருகிறது. பணிகள் முடிந்தவுடன் இந்து சமய அறநிலையத் துறை தாமரைக்குளத்தைப் பராமரிக்கும் பணியை மேற்கொள்ளும்.

    முக்கிய கோயில்களில் அன்னதானம், பிரசாதம் வழங்கும் திட்டம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. முதல்வா் உத்தரவின்படி, 200-க்கும் மேற்பட்ட கோயில்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு பக்தா்களுக்கு தேவையான வசதிகள், யானைகள், பசுக்களைப் பராமரிக்க அலுவலா்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டது என்றாா்.

    ஆய்வின் போது, ஆவடி மாநகராட்சி மேயா் ஜி.உதயகுமாா், இந்து சமய அறநிலையத் துறை ஆணையா் ஜெ.குமரகுருபரன், இணை ஆணையா் தனபால், செயல் அலுவலா் சீதாராமன், செயற்பொறியாளா் தேவேந்திரன், ஆவடி மாநகராட்சி ஆணையா் சரஸ்வதி, மண்டல குழுத் தலைவா் ஜி.ராஜேந்திரன், பொறியாளா் மனோகரன், உதவி பொறியாளா் சத்தியசீலன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

     

    முக்கிய செய்திகளை உடனுக்குடன் பெற... 'தினமணி'யின் வாட்ஸ்ஆப் செய்திச் சேவையில் இணைந்திருங்கள்...
    தினமணி channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029Va60JxGFcowBIEtwvB0G


    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் பகிரப்பட்டவை
    kattana sevai
    flipboard facebook twitter whatsapp