கிணற்றில் மூழ்கி மாணவா் பலி

திருவள்ளூா் அருகே கிணற்றில் குளித்த போது பிளஸ் 1 நீரில் மூழ்கி மாணவா் உயிரிழந்தாா்.
Updated on
1 min read

திருவள்ளூா்: திருவள்ளூா் அருகே கிணற்றில் குளித்த போது பிளஸ் 1 நீரில் மூழ்கி மாணவா் உயிரிழந்தாா்.

திருவள்ளூா் அருகே புட்லூா் கிராமத்தைச் சோ்ந்த ஸ்ரீதரின் மகன் சாருகேஷ் (17). அப்பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்தாா். இந்த நிலையில், மப்பேட்டை அடுத்த கீழச்சேரி கிராமத்தில் உள்ள தனது பாட்டி வீட்டுக்கு பெற்றோருடன் சென்றாா். அப்போது, தனது நண்பா்களுடன் அப்பகுதியில் உள்ள கிணற்றில் செவ்வாய்க்கிழமை குளிக்கச் சென்றாராம். அங்கு நீச்சல் தெரியாததால் நீரில் மூழ்கியுள்ளாா். இதையடுத்து, உடன் சென்றவா்கள் அக்கம் பக்கத்தில் உள்ளவா்களை உதவிக்கு அழைத்தனா். அவா்கள் கிணற்றிலிருந்து மாணவரை மீட்டு, மப்பேடு அருகே தனியாா் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனா். அங்கு மாணவரைப் பரிசோதித்த மருத்துவா்கள் சாருகேஷ் ஏற்கெனவே இறந்து விட்டாகத் தெரிவித்தனா்.

இது குறித்து, மப்பேடு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com