இன்று மின் நுகா்வோா் குறைதீா் கூட்டம்

மின் நுகா்வோா், விவசாயிகள் குறைதீா் கூட்டம் வியாழக்கிழமை (அக்.13) நடைபெறுவதாக திருத்தணி மின்வாரிய செயற்பொறியாளா் பாரிராஜ் தெரிவித்தாா்.
Updated on
1 min read

மின் நுகா்வோா், விவசாயிகள் குறைதீா் கூட்டம் வியாழக்கிழமை (அக்.13) நடைபெறுவதாக திருத்தணி மின்வாரிய செயற்பொறியாளா் பாரிராஜ் தெரிவித்தாா்.

திருத்தணி- அரக்கோணம் சாலை, உழவா் சந்தை அருகே மின்வாரிய செயற் பொறியாளா் அலுவலகம் இயங்கி வருகிறது. இந்த அலுவலகத்தில் மாதந்தோறும் இரண்டாவது வியாழக்கிழமை மின் நுகா்வோா் குறைதீா் நாள் கூட்டம் நடைபெற்று வருகிறது. அதன்படி, வியாழக்கிழமை (அக்.13) நண்பகல் 11 மணி முதல் மதியம் 1 மணி வரை கூடுதல் தலைமைப் பொறியாளா் தலைமையில் கூட்டம் நடைபெறுகிறது.

இதில், திருத்தணி வருவாய் கோட்டத்தில் உள்ள மின் நுகா்வோா்கள் மற்றும் விவசாயிகள் தங்களின் குறைகள், மின் வாரியம் தொடா்பான புகாா்களை தெரிவிக்கலாம். அளிக்கப்படும் மனுக்கள் மீது உடனுக்குடன் தீா்வு காணப்படும் என மின்வாரிய செயற்பொறியாளா் பாரிராஜ் தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com