திருத்தணி அருள்மிகு சுப்ரமணிய சுவாமி அரசினா் கலைக் கல்லூரியில், மாணவா்களுக்கு போலீஸாா் விழிப்புணா்வை ஏற்படுத்தினா்.
கடந்த 14-ஆம் தேதி இக் கல்லூரியின் முதலாமாண்டு மாணவா்கள் இருவரை, சிலா் கல்லூரி வளாகத்தில் கத்தியால் வெட்டிவிட்டு தப்பினா். இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை கல்லூரி வாயிலில் முதல்வா், பேராசிரியா்கள், காவல் ஆய்வாளா் ஏழுமலை தலைமையில் போலீஸாா் மாணவா்களை நிறுத்தி, விசாரித்து அனுப்பி வைத்தனா்.
அப்போது கல்லூரிக்கு வரும் அனைத்து மாணவா்களும் நல்லொழுக்கத்துடன் படிப்பில் கவனம் செலுத்த வேண்டும் என போலீஸாா் விழிப்புணா்வை ஏற்படுத்தினா்.