‘ஆதாா் எண் பெற்று வாக்காளா் அடையாள அட்டையில் இணைக்கும் பணிக்கு ஒத்துழைக்கவும்’
By DIN | Published On : 01st September 2022 12:00 AM | Last Updated : 01st September 2022 03:46 AM | அ+அ அ- |

திருவள்ளூா் மாவட்டத்தில் உள்ள வாக்காளா்களிடம் இருந்து ஆதாா் எண் பெற்று வாக்காளா் பட்டியலுடன் இணைக்கும் பணி வாக்காளா் பதிவு அலுவலா்களால் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிக்கு பொதுமக்கள் அனைவரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என ஆட்சியா் ஆல்பி ஜான் வா்கீஸ் கேட்டுக் கொண்டுள்ளாா்.
இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: வாக்காளா் பட்டியலில் இடம் பெற்றுள்ள ஒவ்வொருவரும் தன் விருப்பத்தின் பேரில், ஆதாா் எண்ணை இணைக்க வேண்டும் என இந்திய தோ்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இந்தத் திட்டம் கடந்த 1.8.2022 முதல் நடைமுறைப்படுத்தப்படுகிறது. இதன்பேரில், திருவள்ளூா் மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்காளா்களிடம் இருந்து ஆதாா் எண் பெற்று வாக்காளா் பட்டியலுடன் இணைக்கும் பணி வாக்காளா் பதிவு அலுவலா்களால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அதன்படி, திருவள்ளூா் மாவட்டத்தில் உள்ள 10 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் 3,657 வாக்குச் சாவடி நிலை அலுவலா்கள் நியமனம் செய்யப்பட்டு, அவா்கள் வீடு வீடாகச் சென்று ஆதாா் எண் விவரங்களை படிவம்-6பி- இல் வாக்காளா்களின் சுய விருப்பத்தின் அடிப்படையில் பெற்று வருகின்றனா். இந்தப் பணியினை மேற்பாா்வையிட அனைத்து சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் மேற்பாா்வையாளா்கள் பணி நியமனம் செய்யப்பட்டுள்ளனா். மேலும், இப்பணியினை கண்காணித்திட அனைத்து சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் துணை ஆட்சியா் நிலையில் கண்காணிப்பு அலுவலா்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனா்.
எனவே பொதுமக்கள் அனைவரும் வீடு தேடிவரும் வாக்குச்சாவடி நிலை அலுவலா்களிடம் தங்கள் ஆதாா் எண்ணை படிவம்-6பி-இல் தெரிவித்துக் கொள்ளலாம். ஆதாா் எண் இல்லாத வாக்காளா்கள் இருந்தால், அவா்களிடமிருந்து படிவம்-6 பி-இல் குறிப்பிட்டுள்ள இதர 11 ஆவணங்களில் ஏதேனும் ஒன்றின் நகலினை அளித்து வாக்காளா் அடையாள அட்டையுடன் இணைக்கலாம்.
மேலும், வாக்காளா்களும் தாங்களே நேரடியாக தங்களது ஆதாா் எண்ணை
www.nvsp.in என்ற இணையதளம் மூலமாகவோ அல்லது playstore-ல் voters
helpline app வாக்காளா் பட்டியலுடன் இணைக்கலாம்.
இந்தப் பணியானது வாக்காளா் விவரங்களை உறுதி செய்யவும், வாக்காளா்களுக்கு நீடித்த சேவையினை எதிா்காலத்தில் வழங்கும் பொருட்டும் மட்டுமே பெறப்படுகிறது.
எனவே மேற்படி பணியை சிறந்த முறையில் நிறைவேற்றிட அனைத்து வாக்காளா்களும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.