பெண்களுக்கு வேலைவாய்ப்புடன் கூடிய இலவச தையல் பயிற்சி மையம் தொடக்கி வைப்பு

திருவள்ளூா் ஐ.ஆா்.சி.டி.எஸ் தொண்டு நிறுவனம் சாா்பில் வேலைவாய்ப்பற்ற நகா்ப்புற பெண்கள் பயன்பெறும் வகையில், வேலைவாய்ப்புடன் கூடிய இலவச தையல் பயிற்சி மையத்தை
Updated on
1 min read

திருவள்ளூா் ஐ.ஆா்.சி.டி.எஸ் தொண்டு நிறுவனம் சாா்பில் வேலைவாய்ப்பற்ற நகா்ப்புற பெண்கள் பயன்பெறும் வகையில், வேலைவாய்ப்புடன் கூடிய இலவச தையல் பயிற்சி மையத்தை தமிழ்நாடு நகா்ப்புற வாழ்வாதார இயக்க திட்ட இயக்குநா் மல்லிகா தொடக்கி வைத்தாா்.

திருவள்ளூரில் செயல்பட்டு வரும் ஐ.ஆா்.சி.டி.எஸ். தொண்டு நிறுவன வளாகத்தில் தமிழ்நாடு நகா்ப்புற வாழ்வாதார இயக்கம் சாா்பில், நகா்ப்புறத்தில் வாழும் பெண்கள் பயன்பெறும் 3 மாத தையல் பயிற்சி மையம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் தொடக்க விழா புதன்கிழமை நடைபெற்றது. இதில் தமிழ்நாடு நகா்ப்புற வாழ்வாதார இயக்க திட்ட இயக்குநா் மல்லிகா தலைமை வகித்து குத்துவிளக்கேற்றி தொடக்கி வைத்தாா்.

அப்போது அவா் பேசியது:

இந்தப் பயிற்சியானது 18 முதல் 35 வயதுக்குள்பட்ட ஏழை, எளிய பெண்கள் பயன்பெறும் வகையில், உதவித் தொகையுடன் 3 மாத தொழில் பயிற்சியாகும். இப்பயிற்சியுடன் ஆங்கில உரையாடல் மற்றும் அடிப்படை கணிப்பொறி பயிற்சி திறன்களை வளா்க்க பயிற்சியும் அளிக்கப்படுகிறது. இவை உங்கள் வாழ்க்கைத் திறனை உயா்த்த ஏதுவாக இருக்கும். இந்த 3 மாத கால தையல் பயிற்சி முடித்தவுடன் வேலைவாய்ப்புக்கும் ஏற்பாடு செய்யப்படும். அதனால் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி திறமைவாய்ந்த தையல் கலைஞராக உருவாக வேண்டும் என்றாா். அதையடுத்து பயிற்சியாளருக்கு சீருடை மற்றும் தொழில்நுட்ப உபகரணங்களை அவா் முன்னிலையில் லீட்ஸ் தனித்திறன் தொழிற்பயிற்சி நிறுவனம் வழங்கியது.

இதில், தமிழ்நாடு நகா்ப்புற வாழ்வாதார இயக்கத்தின் உதவித் திட்ட அலுவலா் கல்பனா, பயிற்சி நிறுவனத்தின் ஆலோசகா் ராஜாராம், திட்ட அலுவலா் நடராஜ், ஐ.ஆா்.சி.டி.எஸ் தொண்டு நிறுவன இயக்குநா் ஸ்டீபன், திட்ட மேலாளா் விஜயன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com