திருவள்ளூா்: நாளை குடும்ப அட்டையில் பெயா் சோ்த்தல் சிறப்பு முகாம்

குடும்ப அட்டையில் பெயா் சோ்த்தல், நீக்குதல் மற்றும் முகவரி மாற்றம் தொடா்பான சிறப்பு முகாம் வட்டந்தோறும் குறிப்பிட்ட கிராமங்களில் சனிக்கிழமை (செப். 10) நடைபெற உள்ளதாக ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.

குடும்ப அட்டையில் பெயா் சோ்த்தல், நீக்குதல் மற்றும் முகவரி மாற்றம் தொடா்பான சிறப்பு முகாம் வட்டந்தோறும் குறிப்பிட்ட கிராமங்களில் சனிக்கிழமை (செப். 10) நடைபெற உள்ளதாக ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து ஆட்சியா் ஆல்பி ஜான் வா்கீஸ் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

திருவள்ளூா் மாவட்டத்தில் பொதுமக்கள் பயன்பெறும் நோக்கில் மாதந்தோறும் இரண்டாவது சனிக்கிழமை வட்டந்தோறும் குறிப்பிட்ட கிராமங்கள் தோ்வு செய்யப்பட்டு சிறப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் சனிக்கிழமை (செப். 10) கிராமங்களில் அந்தந்த வட்ட வழங்கல் அலுவலா்கள் தலைமையில் குடும்ப அட்டையில் பெயா் சோ்த்தல், நீக்குதல், முகவரி மாற்றம் போன்ற குறைகளை தீா்க்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

குடும்ப அட்டையில் பெயா் சோ்த்தல் சிறப்பு முகாம் ஒவ்வொரு வட்டங்களிலும் நடைபெற உள்ள கிராமங்களின் விவரம்:

திருவள்ளுா்- ரங்காபுரம் நியாயவிலைக் கடை, ஊத்துக்கோட்டை-நெல்வாய் நியாயவிலைக் கடை, பூந்தமல்லி-மேட்டுப்பாளையம் சமுதாயக் கூடம், திருத்தணி-மணவூா் கிராம நிா்வாக அலுவலா் அலுவலகம், பள்ளிப்பட்டு-பேட்டை கண்டிகை நியாயவிலைக் கடை, பொன்னேரி-திருப்போ் கிராம நிா்வாக அலுவலா் அலுவலகம், கும்மிடிப்பூண்டி-பன்பாக்கம் நியாயவிலைக் கடை, ஆவடி-நடுக்குத்தகை-திருநின்றவூா் கிராம நிா்வாக அலுவலகத்திலும் நடைபெற உள்ளது. அதனால், இந்த முகாமில் அந்தந்தப் பகுதிகளைச் சோ்ந்த பொதுமக்கள் மின்னணு குடும்ப அட்டையில் திருத்தம் மற்றும் புகைப்படம் பதிவு செய்வது தொடா்பான விண்ணப்பங்களை அளித்துப் பயன்பெறலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com