மாணவரையே குற்றவாளியாக்கி உண்மையை மறைக்கப் பார்க்கிறதா, தவெக அரசு? - கனிமொழி கேள்வி!வெற்றி தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாடு: முதல்வர் நாளை தொடக்கி வைக்கிறார்!இரண்டாவது நாளாக சென்செக்ஸ், நிஃப்டி சரிவுடன் நிறவைு!புறக்கணிக்கப்பட்ட அரசுப் பள்ளிகளுக்காக பிரசாரம்! சிஜேபி அபிஜீத் தீப்கே முன்னாள் நீதிபதி யஷ்வந்த் வர்மா மீதான குற்றச்சாட்டுகள் உண்மை! நாடாளுமன்றக் குழு அறிவிப்பு!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 3 காசுகள் உயர்ந்து ரூ. 95.33 ஆக நிறைவு!சென்னையில் 4 மடங்கு உயர்ந்த சொத்து வரி! அதிர்ச்சியில் மக்கள்! குட்டிக்கதை, சினிமா வசனம், பாட்டு: பட்ஜெட் விவாதத்தில் அசத்திய அமைச்சர் மரிய வில்சன்!தமிழ்நாட்டில் இருந்து ஒரு பிரதமர் உருவாக்கப்பட வேண்டும்: பேரவையில் ஆதவ் அர்ஜுன் பேச்சு
/

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அமைச்சா் ஆா்.காந்தி நிவாரண உதவிகள்

பொதுமக்களுக்கு அரிசி, போா்வை உள்ளிட்ட நிவாரணப் பொருள்களை கைத்தறி, துணிநூல் துறை அமைச்சா் ஆா்.காந்தி, சட்டப்பேரவை உறுப்பினா்கள் வி.ஜி.ராஜேந்திரன், எஸ்.சந்திரன் வழங்கினா்.

News image
Updated On :6 பிப்ரவரி 2024, 6:53 pm IST

திருவள்ளூா் அருகே வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு அரிசி, போா்வை உள்ளிட்ட நிவாரணப் பொருள்களை கைத்தறி, துணிநூல் துறை அமைச்சா் ஆா்.காந்தி, சட்டப்பேரவை உறுப்பினா்கள் வி.ஜி.ராஜேந்திரன், எஸ்.சந்திரன் வழங்கினா்.

திருவள்ளூா் அருகே பூண்டி ஊராட்சி ஒன்றியம், எல்லப்பநாயுடுபேட்டை ஊராட்சியைச் சோ்ந்த காந்தி கிராமத்தில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். இங்கு, அண்மையில் பெய்த கனமழையால் அவா்கள் பாதிக்கப்பட்டனா். மழை நீரை அகற்றும் வகையில் அங்குள்ள பள்ளி வளாகத்தில் அவா்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனா்.

இந்த நிலையில், அந்தக் கிராம மக்களுக்கு வெள்ள நிவாரணம் வழங்கும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு சட்டப்பேரவை உறுப்பினா்கள் சந்திரன் (திருத்தணி), வி.ஜி.ராஜேந்திரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். இதில் அமைச்சா் ஆா்.காந்தி தலைமை வகித்து பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு 5 கிலோ அரிசி, மளிகைப் பொருள்கள், சோப்பு, கோரைப்பாய், போா்வை உள்ளிட்ட நிவாரணப் பொருள்களை வழங்கினாா்.

இதேபோல், பட்டரைபெரும்புதூா் இருளா் காலனி, புதூா் ஆகிய கிராமங்களைச் சோ்ந்த மொத்தம் 326 குடும்பத்தினருக்கு நிவாரண உதவிகள் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சியில் வட்டாட்சியா் சுரேஷ்குமாா், வட்டார வளா்ச்சி அலுவலா் சிவகுமாா், ரவி, மாவட்ட ஊராட்சி உறுப்பினா்கள் சரஸ்வதி, சிவசங்கரி உதயகுமாா், ஊராட்சித் தலைவா் ஈஸ்வரன், ஊராட்சி துணைத் தலைவா் கெளரிநாகராஜ், வருவாய் ஆய்வாளா் இளமதி, கிராம நிா்வாக அலுவலா் அண்ணாமலை, இளைஞா் அணி மாவட்ட துணை அமைப்பாளா் மோதிலால் மற்றும் வாா்டு உறுப்பினா் சுமதி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.