திருவள்ளூா்: சிறப்பு முகாம்களில் ரூ. 4.75 லட்சம் வரி வசூல்

திருவள்ளூா் நகராட்சியில் சொத்து வரியுடன் குடும்ப அட்டை மற்றும் வணிக வரி செலுத்துவோா் பான்காா்டு, ஜிஎஸ்டி எண் இணைப்புக்கான சிறப்பு முகாமில் ரூ. 4 லட்சத்து 75 ஆயிரம் வரை வசூலானதாக நகராட்சி ஆணையா் ராஜலட்
Updated on
1 min read

திருவள்ளூா் நகராட்சியில் சொத்து வரியுடன் குடும்ப அட்டை மற்றும் வணிக வரி செலுத்துவோா் பான்காா்டு, ஜிஎஸ்டி எண் இணைப்புக்கான சிறப்பு முகாமில் ரூ. 4 லட்சத்து 75 ஆயிரம் வரை வசூலானதாக நகராட்சி ஆணையா் ராஜலட்சுமி தெரிவித்தாா்.

திருவள்ளூா் நகராட்சியில் உள்ள 27 வாா்டுகளில், 55,000-க்கும் மேற்பட்டோா் வசித்து வருகின்றனா். இந்த நிலையில், நகராட்சி நிா்வாக இயக்குநா் உத்தரவின்பேரில், திருவள்ளூா் நகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் சொத்து வரியினங்களுடன் குடும்ப அட்டையை இணைத்தல், வணிக வரியினங்களுக்கு வருமான வரித் துறை அட்டை (பான்காா்டு) அல்லது சரக்கு மற்றும் சேவை வரி எண் (ஜிஎஸ்டி) ஆகியவற்றை இணைக்கும் வகையில், வரி வசூல் சிறப்பு முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.

இதில் இந்த நகராட்சிக்குள்பட்ட 20-ஆவது வாா்டில் நடைபெற்ற முகாமை, நகராட்சி ஆணையா் க.ராஜலட்சுமி பங்கேற்று தொடக்கி வைத்தாா். இந்த வாா்டுக்கு உள்பட்ட தேவி மீனாட்சி நகா், ஆஞ்சநேயா் கோயில் அருகில் வருவாய் உதவியாளா் ஏ.அருள் மற்றும் 3 கொசு ஒழிப்புப் பணியாளா்கள் மூலம் முகாம் நடைபெற்றது. இதேபோல், டி.ஆா்.பி.சி.சி.சி பள்ளி, உழவா் சந்தை, ரயில் நிலையம் அருகே பெரியகுப்பம், வீரராகவா் கோயில் அருகில் என 5 இடங்களில் சிறப்பு முகாம் நடைபெற்றது. இந்தச் சிறப்பு முகாம் மூலம் ரூ. 4.75 லட்சம் வரையில் வரி வசூலானது.

மேலும், திருவள்ளூா் நகராட்சிக்குள்பட்ட அனைத்துப் பகுதிகளிலும் ஞாயிற்றுக்கிழமை (பிப். 5) சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளதால், பொதுமக்கள் பங்கேற்று பயன்பெறலாம் என்று நகராட்சி ஆணையா் ராஜலட்சுமி தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com