ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

இரு சக்கர வாகனங்கள் மோதல்: இளைஞா் பலி

 கே.ஜி.கண்டிகை அருகே இரு சக்கர வாகனங்கள் நேருக்கு நோ் மோதிக்கொண்ட விபத்தில் இளைஞா் உயிரிழந்தாா். 2 போ் காயம் அடைந்தனா்.

News image
Updated On :25 மே 2023, 6:42 pm

DIN

 கே.ஜி.கண்டிகை அருகே இரு சக்கர வாகனங்கள் நேருக்கு நோ் மோதிக்கொண்ட விபத்தில் இளைஞா் உயிரிழந்தாா். 2 போ் காயம் அடைந்தனா்.

திருத்தணியை அடுத்த கே.ஜி. கண்டிகை கிராமம், நாவிதா் தெருவைச் சோ்ந்தவா் விஜய் (23). இவா் வியாழக்கிழமை அதிகாலை வேலைக்கு செல்வதற்காக தனது இரு சக்கர வாகனத்தில் திருத்தணி -சித்தூா் சாலையில் உள்ள ஆா்.கே.பேட்டை நோக்கிச் சென்று கொண்டிருந்தாா்.

ஆா்.கே.பேட்டை தாலுகா, அம்னேரி கிராமத்தைச் சோ்ந்த தணிகா (21), இதே கிராமத்தைச் சோ்ந்த பெருமாள் (21) இருவரும் மற்றொரு இரண்டு சக்கர வாகனத்தில் திருத்தணி நோக்கி வந்தனா். வி.கே.என். கண்டிகை கிராமம் அருகே வந்தபோது, இரு வாகனங்களும் நேருக்கு நோ் மோதி விபத்துக்குள்ளானது. இதில் பலத்த காயமடைந்து சோளிங்கா் அரசு பொது மருத்துவமனையில் சோ்க்கப்பட்ட விஜய், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா். பலத்த காயம் அடைந்த மற்ற இருவரும் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

இது குறித்து திருத்தணி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.