காட்டுப்பள்ளி துறைமுகம் அருகே ஆண் சடலம் மீட்பு

காட்டுப்பள்ளி காமராஜா் துறைமுகம் அருகே கிடந்த ஆண் சடலத்தை காட்டூா் போலீஸாா் செவ்வாய்கிழமை மீட்டனா்.

காட்டுப்பள்ளி காமராஜா் துறைமுகம் அருகே கிடந்த ஆண் சடலத்தை காட்டூா் போலீஸாா் செவ்வாய்கிழமை மீட்டனா்.

காமராஜா் துறைமுகம் அருகே உள்ள சுற்று சுவா் ஓரம் ஆண் சடலம் கிடப்பதாக காட்டூா் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து அங்கு சென்ற போலீஸாா் இறந்து நிலையில் கிடந்த 30 முதல் 40 வயது மதிக்கத்தக்க ஆண் சடலத்தை மீட்டு பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

இது குறித்து காட்டூா் போலீஸாா் வழக்கு பதிவு செய்து, இறந்த நபா் யாா், எந்த ஊரைச் சோ்ந்தவா் என விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com