இருசக்கர வாகனத்திலிருந்து விழுந்த ஓட்டுநர் பலி

ஆவடி அருகே இரு சக்கர வாகனத்திலிருந்து கீழே விழுந்த ஓட்டுநர் உயிரிழந்தார். 
Updated on
1 min read

ஆவடி அருகே இரு சக்கர வாகனத்திலிருந்து கீழே விழுந்த ஓட்டுநர் உயிரிழந்தார்.
 திருமுல்லைவாயல், எஸ்.எஸ் நகர் விரிவாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் சந்தோஷ்குமார் (44). தனியார் நிறுவனத்தில் ஓட்டுநராக பணியாற்றி வந்தார்.
 இந்த நிலையில், திங்கள்கிழமை இரவு பணி முடிந்து தனது இரு சக்கர வாகனத்தில் சந்தோஷ்குமார் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார்.
 ஆவடி காவல் ஆணையர் அலுவலகம் அருகில் சி.டி.எச் சாலையில் சென்றபோது, திடீரென நிலை தடுமாறி சாலை தடுப்பு மீது இருசக்கர வாகனம் மோதியது.
 இதில், தலையில் பலத்த காயமடைந்த சந்தோஷ்குமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவலறிந்து வந்த ஆவடி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸார், சடலத்தை மீட்டு போரூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
 புகாரின் பேரில், காவல் ஆய்வாளர் சுபாஷினி தலைமையிலான போலீஸார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com