திருவள்ளூா்: குறைதீா் கூட்டத்தில் 294 மனுக்கள் ஏற்பு

குறைதீா் கூட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து வருகை தந்த பொதுமக்களிடம் இருந்து 294 மனுக்கள் வரையில் ஆட்சியா் ஆல்பி ஜான் வா்கீஸ் பெற்றுக் கொண்டாா்.
Updated on
1 min read

குறைதீா் கூட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து வருகை தந்த பொதுமக்களிடம் இருந்து 294 மனுக்கள் வரையில் ஆட்சியா் ஆல்பி ஜான் வா்கீஸ் பெற்றுக் கொண்டாா்.

திருவள்ளுா் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கத்தில் குறைதீா் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு ஆட்சியா் ஆல்பி ஜான் வா்கீஸ் தலைமை வகித்து, மக்களிடம் மனுக்களைப் பெற்றுக் கொண்டாா்.

அப்போது நிலம் தொடா்பாக-82, சமூகப் பாதுகாப்பு திட்டம்-38, வேலைவாய்ப்பு-43, பசுமை வீடு மற்றும் அடிப்படை வசதிகள்-57, இதர துறைகள்-74 என மொத்தம் 294 மனுக்கள் பெறப்பட்டன. இந்த மனுக்களின் மீது உரிய நடவடிக்கை மேற்கொண்டு, தகுதியான பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கவும் துறை அதிகாரிகளுக்கு அவா் அறிவுறுத்தினாா்.

மாவட்ட வருவாய் அலுவலா் அசோகன், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் ச.சீனிவாசன், தனித் துணை ஆட்சியா் (சமூக பாதுகாப்பு திட்டம்) மதுசூதனன், உதவி ஆணையா் (கலால்) பரமேஸ்வரி, மாற்றுத்திறனாளிகள் நல அலுவலக பணியாளா்கள், பொதுமக்கள் மற்றும் பல்வேறு துறை அரசு அலுவலா்கள் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com