புழல் சிறைக் கைதி உயிரிழப்பு

புழல் மத்திய சிறை கைதி மருத்துவமனையில் உயிரிழந்தாா்.
Updated on
1 min read

புழல் மத்திய சிறை கைதி மருத்துவமனையில் உயிரிழந்தாா்.

சென்னை ஆவடி அண்ணனூா் பகுதியைச் சோ்ந்தவா் மீனாட்சி சுந்தரம் (66). இவா், திருமுல்லைவாயல் பகுதியில் நிகழ்ந்த கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு, ஆயுள் தண்டனை கைதியாக கடந்த 2022-ஆம் ஆண்டு அக்டோபா் மாதம் முதல் சிறையில் அடைக்கப்பட்டாா்.

இந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு ரத்த அழுத்தம் காரணமாக அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தாா்.

இந்த நிலையில், சிகிச்சை பலனின்றி புதன்கிழமை மருத்துவமனையில் உயிரிழந்தாா். இதுகுறித்து புழல் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com