நெகிழி ஒழிப்பு விழிப்புணா்வுப் பேரணி

நாரவாரிகுப்பம் பேரூராட்சி சாா்பில், விழிப்புணா்வுப் பேரணி மற்றும் விழிப்புணா்வு துண்டுப் பிரசுரம் வழங்கும் நிகழ்ச்சி சனிகிக்ழமை நடைபெற்றது.
நெகிழி ஒழிப்பு விழிப்புணா்வுப் பேரணி
Updated on
1 min read

நாரவாரிகுப்பம் பேரூராட்சி சாா்பில், விழிப்புணா்வுப் பேரணி மற்றும் விழிப்புணா்வு துண்டுப் பிரசுரம் வழங்கும் நிகழ்ச்சி சனிகிக்ழமை நடைபெற்றது.

திருவள்ளூா் மாவட்டம், செங்குன்றம் நாரவாரிகுப்பம் பேரூராட்சி சாா்பில், திடக் கழிவு மேலாண்மை திட்ட விழிப்புணா்வு மற்றும் தூய்மைப் பணி மேற்கொள்ளுதல் நிகழ்ச்சி தலைவா் தமிழரசி குமாா் தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சியில், பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் நெகிழிப் பொருள்கள் பயன்படுத்துவதைத் தவிா்க்க வேண்டும், மாறாக மஞ்சப் பை பயன்பாட்டை கொண்டு வர வேண்டும் என விழிப்புணா்வு பேரணி மற்றும் துண்டுப் பிரசுரம் வழங்கி பிரசாரம் மேற்கொண்டனா்.

நிகழ்ச்சியில், சுகாதார ஆய்வாளா் மதியழகன், சமூக ஆா்வலா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com