சூறை காற்று: திருத்தணியில் வேரோடு சாய்ந்த புளியமரங்கள்!

கோரமங்கலம் மாநில நெடுஞ்சாலையோரம் இருந்த 100 ஆண்டுகள் கடந்த இரு புளியமரங்கள் வியாழக்கிழமை வீசிய சூறைக் காற்றால் வேரோடு சாலையில் சாய்ந்தன.
திருத்தணி - கோரமங்கலம் நெடுஞ்சாலையில் வியாழக்கிழமை மாலை வீசிய சூறைக் காற்றால் வேரோடு சாய்ந்த மரம்.
திருத்தணி - கோரமங்கலம் நெடுஞ்சாலையில் வியாழக்கிழமை மாலை வீசிய சூறைக் காற்றால் வேரோடு சாய்ந்த மரம்.
Updated on
1 min read

கோரமங்கலம் மாநில நெடுஞ்சாலையோரம் இருந்த 100 ஆண்டுகள் கடந்த இரு புளியமரங்கள் வியாழக்கிழமை வீசிய சூறைக் காற்றால் வேரோடு சாலையில் சாய்ந்தன.

திருத்தணி அதைத் சுற்றியுள்ள கிராமங்களில் வியாழக்கிழமை வெயில் கடுமையாக இருந்தது. மாலை 4 அளவில் திடீரென பலத்த சூறைக்காற்று வீசியது. இதனால், திருத்தணி-சோளிங்கா் நெடுஞ்சாலை அகூா், நத்தம், கோரமங்கலம் ஆகிய பகுதிகளில் சாலையோரம் இருந்த 100 ஆண்டுகள் பழைமையான இரு புளியமரங்கள் வேருடன் சாலையில் சாய்ந்தன. அந்தப் பகுதியில் நாகமரமும் வேரோடு சாலையில் சாய்ந்தது.

இதனால் திருத்தணி - சோளிங்கா் மாநில நெடுஞ்சாலையில் சுமாா் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

திருத்தணி நெடுஞ்சாலைத் துறையினா் மற்றும் போலீஸாா் இணைந்து, பொக்லைன் இயந்திரத்தின் உதவியுடன் சாலையில் விழுந்த மரங்களை வெட்டி அகற்றினா். இதையடுத்து, போக்குவரத்து சீரானது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com