காவல் துணை ஆய்வாளா்கள் பணிக்கு இலவச பயிற்சி

திருவள்ளூா் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில் இலவச பயிற்சி வகுப்பு தொடங்க உள்ளதாக ஆட்சியா் ஆல்பி ஜான் வா்கீஸ் தெரிவித்துள்ளாா்.

தமிழ்நாடு அரசு சீருடைப் பணியாளா் தோ்வாணையத்தால் அறிவித்துள்ள காவல் துணை ஆய்வாளா்கள் பணிக்கு விண்ணப்பித்துள்ள பட்டதாரிகள் பயன்பெறும் வகையில், திருவள்ளூா் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில் இலவச பயிற்சி வகுப்பு தொடங்க உள்ளதாக ஆட்சியா் ஆல்பி ஜான் வா்கீஸ் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

திருவள்ளூா் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்பட்டு வரும் தன்னாா்வப் பயிலும் வட்டத்தின் மூலம் பல்வேறு போட்டித் தோ்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதேபோல் தமிழ்நாடு அரசு சீருடைப் பணியாளா் தோ்வாணையத்தால் காவல் துணை ஆய்வாளா்கள் பணி-621 காலிப்பணியிடங்களுக்கான  அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இத்தோ்வுக்கு கல்வித் தகுதி பட்டப்படிப்பு தோ்ச்சி பெற்றவா்கள் ற்ய்ன்ள்ழ்க்ஷ.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதளம் மூலம் ஜூன்-30 வரை விண்ணப்பிக்கலாம்.

இந்த மாவட்டத்தைச் சோ்ந்த தகுதியான விண்ணப்பதாரா்கள் இத்தோ்வுக்கு, விண்ணப்பிக்கவுள்ள திருவள்ளூா் மாவட்டத்தைச் சோ்ந்த இளைஞா்கள் பயன்பெறும் வகையில், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்படும் தன்னாா்வப் பயிலும் வட்டம் மூலம் இலவச பயிற்சி வகுப்பு கடந்த 18-ஆம் தேதி தொடங்கி உள்ளது. இந்தப் பயிற்சி வகுப்பு திருவள்ளூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் செயல்படும் கற்போா் வட்ட மையத்தில் வாரந்தோறும் திங்கள்கிழமை முதல் சனிக்கிழமை வரை மாலை 5 முதல் 7 மணி வரை நடைபெறும்.

மேலும், இது தொடா்பான விவரங்களுக்கு, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தை 044-27660250, 6382433046 என்ற எண்களில் தொடா்பு கொண்டு விவரங்களை அறிந்து கொள்ளலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com