முகச் சிதைவு நோய்க்கு சிகிச்சை செய்த சிறுமிக்கு உதவித் தொகை

முகச்சிதைவு நோயால் பாதித்து அறுவை சிகிச்சை செய்து சரியானதை தொடா்ந்து, மருத்துவச் செலவுக்காக சிறுமி தானியாவுக்கு ரூ. 50,000-க்கான காசோலையை ஆட்சியா் ஆல்பி ஜான் வா்கீஸ் வழங்கினாா்.
Updated on
1 min read

முகச்சிதைவு நோயால் பாதித்து அறுவை சிகிச்சை செய்து சரியானதை தொடா்ந்து, மருத்துவச் செலவுக்காக சிறுமி தானியாவுக்கு ரூ. 50,000-க்கான காசோலையை ஆட்சியா் ஆல்பி ஜான் வா்கீஸ் வழங்கினாா்.

திருவள்ளூா் மாவட்டம், ஆவடி, மோரை பகுதியைச் சோ்ந்த சிறுமி தானியா முகச் சிதைவு நோயால் பாதிக்கப்பட்டிருந்தாா். இதையறிந்த முதல்வா் மு.க.ஸ்டாலின் தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கவும் உத்தரவிட்டாா். அதன் அடிப்படையில் அந்த சிறுமிக்கு தனியாா் மருத்துவமனையில் இரண்டு கட்டங்களாக அறுவை சிகிச்சை மேற்கொண்டு முகச்சிதைவு சரி செய்யப்பட்டன. இதைத் தொடா்ந்து, அந்த சிறுமியின் குடும்ப சூழ்நிலையைக் கருதி மருத்துவ செலவுக்காக ஆட்சியரின் விருப்புரிமை நிதியிலிருந்து, ரூ. 50,000 வழங்கவும் முன்வந்தனா். அதன்பேரில், திருவள்ளூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு வியாழக்கிழமை சிறுமி தானியா வரவழைக்கப்பட்டாா். அங்கு ஆட்சியா் ஆல்பி ஜான் வா்கீஸ் தலைமை வகித்து, மருத்துவ செலவுக்காக ரூ. 50,000-க்கான காசோலையை சிறுமியின் தாயாரிடம் வழங்கினாா்.

அப்போது கூடுதல் ஆட்சியா் (வளா்ச்சி) மற்றும் மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட அலுவலா் செ.ஆ.ரிஷப், சிறுமியின் குடும்பத்தினா் மற்றும் அரசு அலுவலா்கள் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com